விவசாயிகள் அழிக்கப்படுகிறார்கள்.. மேகாலயா ஆளுநர் அதிரடி பேச்சு.. போராட்டத்திற்கும் ஆதரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகக் மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் குரல் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் செங்கோட்டை அருகே வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதுதொடர்பாக பல்வேறு விவசாயிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 Farmers demands are genuine, govt must listen says, Meghalaya Governor Satya Pal Malik

இந்த நிலையில் ஆளுநர் சத்யபால் மாலிக், விவசாயிகளுக்கு எதிரான அடக்குமுறையை கைவிடுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

போராடும் விவசாயிகளுக்கு எதிராக போலீசாரைப் பிரயோகப்படுத்தக் கூடாது என பிரதமரை நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய அரசின் விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை.

எந்த ஒரு நாட்டில் விவசாயிகளும், ராணுவ வீரர்களும் திருப்தியாக இல்லையோ அந்த நாடு முன்னேற்றப் பாதையில் செல்லாது. ஆகையால் விவசாயிகள், ராணுவ வீரர்களின் மன திருப்தியை எப்போதும் அரசு உறுதி செய்ய வேண்டும்.

நமது நாட்டில் விவசாயிகள் ஏழைகளாகின்றனர், ஆனால் அரசு ஊழியர்கள் பணபலம் பெற்று வருகின்றனர். நாம் ஏன் ஏழ்மையில் இருக்கிறோம் என்பதை விவசாயிகளால் கூட புரிந்துகொள்ள முடியவில்லை.

விவசாயிகள் அழிக்கப்படுகிறார்கள். அவர்களுக்குத் தெரியாமலேயே இது நடக்கின்றது. விவசாயிகள் தங்களின் விலை பொருளை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்ற சட்டம் இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், உண்மையில் அப்படி இல்லை. இவ்வாறு கூறியுள்ளார் ஆளுநர் சத்யபால் மாலிக்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+