நடுவானில் "அலறல்.." குடிபோதையில் விமான பெண்ணிடம் சில்மிஷம்.. எல்லை மீறிய ஆண் பயணி! பகீர் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் விமானங்களில் அத்துமீறல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நடுவானில் மற்றொரு ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தியாவில் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. மிடில் கிளாஸ் மக்களின் வருமானம் அதிகரிப்பதே விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது.

கொரோனா பரவல் ஏற்பட்ட ஆண்டுகள் தவிர மற்ற அனைத்து ஆண்டுகளும் இந்தியாவில் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

 Female crew member molested in IndiGo flight on midair one arrested

ஏர்லைன்கள்: ஒரு காலத்தில் இந்தியா வானை ஏர் இந்தியா ஆக்கிரமித்து வந்தது. இருப்பினும், தனியார் நிறுவனங்களின் வருகை அதற்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது இந்தியாவில் இண்டிகோ தான் டாப் இடத்தில் இருக்கிறது. மற்ற தனியார் நிறுவனங்கள் திணறியே வருகிறது. அதேநேரம் மற்றொருபுறம் மத்திய அரசிடம் இருந்த ஏர் இந்தியா இப்போது மீண்டும் டாடா வசம் சென்றுள்ளது. இதுபோக புதிதாக ஆகாஷா ஏர் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் விமானத்துறையில் மீண்டும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், பல நேரங்களில் விமானங்களில் இப்போது மிக மோசமான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. ஏர் இந்தியா விமானத்தில் சில மாதங்களுக்கு முன்பு, ஆண் ஒருவர் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த மோசமான சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக சங்கர் மிஸ்ரா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு நடந்து வருகிறது.

மோசமான சம்பவம்: இருப்பினும், அதன் பின்னரும் இது போன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கவில்லை. இதனிடையே மீண்டும் அதேபோன்ற ஒரு மோசமான சம்பவம் இப்போது நடந்துள்ளது. இண்டிகோ விமானத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரிடம் பயணி ஒருவர் அத்துமீறி நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்டார்.

குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபர், ராஜிந்தர் சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் 6E 1428 என்ற இண்டிகோ விமானத்தில் துபாயிலிருந்து அமிர்தசரசுக்கு வந்துள்ளார். நடுவானில் அவர் விமான ஊழியரிடம் அத்துமீறிய நிலையில், இரவு 8 மணிக்கு விமானம் தரையிறங்கியே உடனேயே அவர் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

என்ன நடந்தது: பஞ்சாபின் ஜலந்தரில் உள்ள கோட்லி கிராமத்தில் வசிக்கும் இந்த நபர், விமானத்தில் அதிக அளவு மது அருந்தியுள்ளார். மோதையில் இருந்த அவர் பெண் விமான ஊழியர் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.

நடுவானில் இந்த அத்துமீறல் சம்பவம் நடந்த நிலையில், விமானத்தில் இருந்த ஊழியர்கள் நிலைமையைச் சமாளித்தனர். விமானம் தரையிறங்கியதும் விமானத்தின் பாதுகாப்பு மேனேஜர் இந்தச் சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

 Female crew member molested in IndiGo flight on midair one arrested

அதிகரிக்கும் சம்பவங்கள்: இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக விமானத்தில் பயணிக்கும் பயணிகள் ஆட்சேபனைக்குரிய வகையில் நடந்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கடந்த மாதம், நியூயார்க்கில் இருந்து டெல்லி வரும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் குடிபோதையில் இருந்த இந்தியர் ஒருவர், வாக்குவாதத்தின் போது மற்றொரு பயணி மீது சிறுநீர் கழித்த மோசமான சம்பவம் நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+