அபேஸ்.. 3.3 லட்சம் இந்தியர்களின் வங்கி கணக்கு விபரங்கள்!
டெல்லி: ஏறக்குறைய 3.3 லட்சம் இந்தியர்களின் வங்கி கணக்கு விபரங்கள், கேஒய்சி ஆவணங்கள் உள்ளிட்ட நிதி விபரங்கள் திருடப்பட்டு உள்ளதாக சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கி கணக்குகள், கேஒய்சி ஆவணங்கள் உள்ளிட்ட நிதி ஆவணங்களை ஹேக்கர்கள் குழு திருடி உள்ளதாக அதிர்ச்சி தரும் தகவலை தனியார் சைபர் பாதுகாப்பு ஆயு்வாளர் ராஜ்சேகர் ராஜாஹரியா தெரிவித்துள்ளார்.
கிரிப்டோகரென்சி பரிமாற்ற நிறுவனம், பையூகாயின் போன்ற நிறுவனங்களின் விதிமீறலால் இந்த தகவல் திருட்டு நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதனை பையூகாயின் நிறுவனம் மறுத்துள்ளது.
அதே சமயம் இந்த தகவல் திருட்டிற்கு பின்னாடி Juspay என்ற நிறுவனம் தான் உள்ளது என ShinyHunters என்ற ஹேக்கர்கள் குழு தெரிவித்துள்ளது. 6 ஜிபி திறன் கொண்ட அளவிலான இந்தியர்களின் நிதி தொடர்பான தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். திருடப்பட்ட தகவல்களின் ஸ்கிரீன்ஷாட்டையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
திருடப்பட்ட இந்த தகவல்களில் பயனாளர் பெயர், தொலைப்பேசி எண், பான் எண், இமெயில் முகவரி, ஐஎப்எஸ்சி கேட் உள்ளிட்ட அவரின் வங்கி விபரங்கள், எந்த வகையான வங்கி கணக்கு என்பன உள்ளிட்ட விபரங்களும் அடங்கி உள்ளவன.

கிரிப்டோகரென்சியை வாங்குவதற்காக இந்த தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல்களை பயன்படுத்தி ஹேக்கர்கள் குழு கிரிப்டோகரென்சிக்கு பண பரிவர்த்தனை செய்ய வாய்ப்புள்ளதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால் 3.5 லட்சம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
-
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications