Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதெல்லாம் பாலியல் தொல்லை.. தீர்ப்பில் வரையறை வகுத்த சண்டிகர் நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிளையிங் கிஸ் கொடுப்பதும், கண் சிமிட்டுவதும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட கண்ணியத்தை மீறும் செயலாக இருப்பதால், non-verbal பாலியல் தொந்தரவு ஆக கருதப்பட வேண்டும் என்று சண்டிகர் மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

62 வயது முதியவர் ஒருவர் வீட்டு வாசலில் சுத்தம் செய்து கொண்டு இருந்து பெண்ணை பார்த்து கண் அடித்து, 500 ரூபாய் நோட்டை கீழே போட்டு மன ரீதியாக துன்புறுத்திய சம்பவம் குறித்து பெண் அளித்த புகாரின் பேரில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Flying Kisses Winking Amount to Harassment Court Convicts 62-Year-Old Man

பெண்ணை பார்த்து கண் அடித்த முதியவர்

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது வீட்டிற்கு வெளியே சுத்தம் செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த அசோக் குமார் என்ற 62 வயது முதியவர் வெளியே வந்துள்ளார். அப்போது அந்த முதியவர் பெண்ணை பார்த்து கண் சிமிட்டியதோடு, பறக்கும் முத்தமும் கொடுத்து இருக்கிறார்.

பின்னர் 500 ரூபாய்யை எடுத்து பெண்ணை நோக்கி வீசி மன ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், சத்தம் போட்டுள்ளார். இதனால் பயந்து போன முதியவர் அங்கிருந்து ஓடிவிட்டார். இந்த சம்பவத்தில் கடும் மன உளைச்சல் அடைந்த பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சண்டிகர் நீதிமன்றம் விசாரணை

இது தொடர்பான வழக்கு சண்டிகர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த. இந்த வழக்கின் விசாரணையின் போது, அசோக் குமார் தரப்பு வழக்கறிஞர் அவர் மீதான குற்றச்சாட்டை மறுத்து வாதிட்டார். அசோக் குமார் தரப்பு வாதிடும் போது, தனது கட்சிக்காரர் அசோக் குமார் வீட்டை நோக்கி புகார் அளித்த பெண் குப்பையை வீசியுள்ளார்.

அப்போது இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும், தனது பேரனுக்காக அசோக் குமார் ஐஸ் கிரீம் வாங்கும் போது 500 ரூபாய் நோட்டு கீழே விழுந்துள்ளது. முதியவர் போதையில் இருந்தார் என்பதை நிருபணம் செய்ய எந்த மருத்துவ ஆதாரமும் இல்லை" எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

பிளையிங் கிஸ் கொடுப்பது பாலியல் தொந்தரவு

இந்த வாதத்தை நிராகரித்த நீதிமன்றம், இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 354A (பாலியல் தொந்தரவு) மற்றும் 509 (பெண்ணின் கௌரவத்தை அவமதித்தல்) ஆகியவற்றின் கீழ் முதியவர் செயல்பாடு தண்டனைக்குரிய குற்றமாகும்.

பிளையிங் கிஸ் கொடுப்பது மற்றும் கண் அடிப்பது ஆகிய செயல்கள் வாய்மொழியற்ற பாலியல் தொந்தரவு எனக் கருதப்படுகின்றன. இவை புகாரளித்த பெண்ணின் கண்ணியத்தை மீறும் வகையில் இருப்பதால் இந்தியக் குற்றச் சட்டத்தின் 354A பிரிவின் படி அவர் மீதான குற்றம் உறுதியாகிறது என்று தீர்ப்பளித்தது.

பரோல் ரத்து செய்யப்படும்

குற்றவாளி என்று உத்தரவிட்டாலும் ஆறு மாத காலத்திற்கு நல்ல நடத்தை மற்றும் அமைதியை பேணும் நிபந்தனையுடன், அசோக் குமாரை பரோலில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த ஆறு மாத காலத்தில் அவரது நடத்தை கண்காணிக்கப்படும் என்றும் அவர் கண்ணியக்குறைவாக நடந்தால் பரோல் ரத்து செய்யப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+