தீபாவளி வரை ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியம்.. 80 கோடி மக்களுக்கு பலன்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: இலவச உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டம் தீபாவளி பண்டிகை வரை நீட்டிக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக, மக்கள் வருமானம் இன்றி தவிப்பதால், ரேஷன் கடைகள் வழியாக, ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி உரையின்போது அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்புக்கு பிறகு முதல்முறையாக, மத்திய அமைச்சரவை இன்று பிரதமர் மோடி தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில், கொரோனா நிலவரம், நோய்த்தடுப்பு பணிகள் மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தேசிய உணவு பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு மாதம் 5 கிலோ இலவச தானியங்கள் வழங்கும் திட்டத்தை, ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை நீட்டிக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தால், 80 கோடி மக்கள் பயனடைவார்கள்.












Click it and Unblock the Notifications