ரயில் பயணிகள் வயிற்றில் பாலை வார்த்த ரயில்வே! ஜனவரி முதல் வரும் மெகா மாற்றம்! இனி காசு கரியாகாது!
டெல்லி: இந்தியா முழுவதும் இருக்கும் பயணிகளின் முதல் தேர்வாக ரயில் பயணமே இருக்கிறது. திட்டமிட்ட நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தையே மக்கள் விரும்புகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே முன் பதிவு செய்த நிலையில், பயண தேதியை மாற்ற வேண்டுமானால், டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு புதிதாக முன்பதிவு செய்ய வேண்டும். இந்த நிலையில் ஜனவரி முதல் எந்தவித கட்டணமும் இல்லாமல் ரயில்வேயில் ஆன்லைனில் பயண தேதியை மாற்றம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார் மத்திய ரயில்வே துறை அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ்.
இந்தியாவின் மிக முக்கிய துறை என்றால் அது ரயில்வே தான். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரயில்வே துறை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் அனைத்து பயணிகளையும் இணைக்கிறது. ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு ஆயிரக்கணக்கான ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன.
நாட்டிலேயே அதிக பணியாளர்களைக் கொண்ட துறையாக ரயில்வே இருக்கிறது. குறைந்த செலவில் பாதுகாப்பான பயணம் என்பதால் மக்களின் சிறந்த தேர்வாக ரயில்வே இருக்கிறது. பேசஞ்சர் ரயில்கள் மட்டும் இல்லாது எக்ஸ்பிரஸ் ரயில்கள், வந்தே பாரத், வந்தே பாரத் ஸ்லீப்பர் மின்சார ரயில்கள் ஆகியவையும் இந்தியா முழுமையும் இயக்கப்படுகிறது.

ரயில் டிக்கெட் முன்பதிவு
பல நாட்களுக்கு முன்பே ரயிலில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பம்சம். மேலும் பயணிகளுக்கு விரைவான அதே நேரத்தில் சிக்கல் இல்லா சேவை வழங்க ரயில்வே புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து ரயில்களுக்கான காத்திருப்பு காலத்தை 120 நாட்களாக ரயில்வே மாற்றி உள்ளது. இதன் மூலம் அனைத்து வகை ரயில்களுக்கும் 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்ய முடியும். இதனால் பயணிகள் குழப்பம் இன்றி பயணிகள் முன்பதிவு செய்யலாம்.
ரயில் டிக்கெட் தேதி மாற்றம்
அதை விட மகிழ்ச்சி செய்தியாக ஜனவரி முதல் எந்தவித கட்டணமும் இல்லாமல் ரயில்வேயில் ஆன்லைனில் பயண தேதியை மாற்றம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார் மத்திய ரயில்வே துறை அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ். பயணத் திட்டங்கள் எப்போது வேண்டுமானால் எதிர்பாராத முறையில் மாறலாம். உடல்நலப் பிரச்சனை, திடீர் வேலை அல்லது குடும்பச் சூழ்நிலைகள் காரணமாக பயணிகளை முன்பே திட்டமிட்டிருந்த ரயில் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு
இந்நிலையில் தான் ஜனவரி மாதம் முதல், பயணிகள் தங்கள் உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை ஆன்லைனில் மாற்றலாம், அதுவும் எந்த கட்டணமும் செலுத்தாமல். 2025 ஜனவரி மாதம் முதல் பயணிகள் தங்களின் உறுதியாக உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை ஆன்லைனில் மாற்றிக்கொள்ளலாம். இதற்காக எந்தவித சேவை கட்டணமும் (service charge) வசூலிக்கப்படாது. இப்போதைய முன்பதிவு டிக்கெட் ரத்து முறை பயணிகளுக்கு நியாயமற்றதாக உள்ளது. அதனால் பயணிகளுக்கேற்ப பயணத்தை மாற்ற எளிய முறையில் இந்த புதிய நடைமுறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம்." என்றார்.
ரயில் முன்பதிவு விதிகள்
அதே நேரத்தில், நீங்கள் மாற்றும், புதிய தேதியில் இருக்கை கிடைக்கும் என உறுதியில்லை. அது அன்றைய ரயிலில் இருக்கை நிலைமையைப் பொறுத்தே அமையும். மேலும் புதிய தேதிக்கான டிக்கெட் விலை பழைய டிக்கெட்டைவிட அதிகமாக இருந்தால், பயணிகள் அந்த வித்தியாச தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.
ஆன்லைன் தேதி மாற்றம்
தற்போதைய விதிகளின் படி, பயண நேரத்திற்கு 48 மணி முதல் 12 மணி நேரத்துக்குள் டிக்கெட்டை ரத்து செய்தால் கட்டணத்தின் 25% வரை கழிக்கப்படுகிறது. 12 மணி முதல் 4 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் அபராதம் மேலும் அதிகரிக்கும். குறிப்பாக ரிசர்வேஷன் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டால், பணம் திரும்ப கிடைப்பதில்லை. இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தால், கோடிக்கணக்கான ரயில் பயணிகள் தங்களின் பயணத் திட்டங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு எளிதாகவும் குறைந்த செலவிலேயே ஏற்பாடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications