Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜி 20 உச்சி மாநாடு! டெல்லியிலிருந்து 1000 பிச்சைக்காரர்கள் ஜனவரியில் வெளியேற்றம்! எதிர்க்கும் என்ஜிஓ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜி 20 உச்சி மாநாடு டெல்லியில் அடுத்த ஆண்டு நடைபெறுவதையொட்டி 1000க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படவுள்ளனர். இதற்காக 4 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வீடுகள் இல்லாதோர் நலனுக்கான தொண்டு நிறுவனம் ஒன்று டெல்லி அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய 20 நாடுகளை கொண்டதுதான் ஜி 20 என்ற அமைப்பாகும்.

இந்த கூட்டமைப்பு பொருளாதாரத்தின் மொத்த உலக உற்பத்தியில் 85 சதவீத பங்கை கொண்டுள்ளது. இந்த அமைப்பு நடத்தும் மாநாட்டில் 20 நாடுகளும் நிதி அமைச்சர்களும், வங்கியின் கவர்னர்களும் கலந்து கொள்வர். உலக பொருளாதாரத்தின் முதன்மைச் சிக்கல்களை கலந்து பேசி வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சியை இந்த அமைப்பு செய்து வருகிறது.

மாநாடு

மாநாடு

இந்த அமைப்பின் மாநாட்டை ஒவ்வொரு ஆண்டும் இதில் உள்ள உறுப்பு நாடுகள் நடத்தும். அதாவது ஆங்கில அகர வரிசைபடி இந்த மாநாடுகளை ஒவ்வொரு உறுப்பு நாடும் நடத்தும். அந்த வகையில் கடைசியாக இந்தோனேசியா நடத்திய நிலையில் இந்த மாநாட்டை நடத்தும் பொறுப்பு தற்போது இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நம் இந்தியா இந்த ஜி 20 உச்சி மாநாட்டை நடத்துகிறது.

பெருமைமிகு இந்தியா

பெருமைமிகு இந்தியா

இது இந்தியர்களுக்கு பெருமை வாய்ந்த விஷயமாகும். அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் இந்தியாவுக்கு முக்கியத்துவத்தையும் கவுரவத்தையும் மரியாதையையும் அளித்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் இந்த மாநாட்டை எந்த வித பிரச்சினையும் இன்றி நல்லபடியாக நடத்த மத்திய அரசு விரும்புகிறது. அதற்கான ஆலோசனை கூட்டங்களையும் நடத்தியுள்ளது.

அடுத்த ஆண்டு

அடுத்த ஆண்டு

இந்த மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த நிலையில் டெல்லியில் உச்சி மாநாடு நடைபெறும் இடத்திற்கு அருகே இருக்கும் பிச்சைக்காரர்களை வேறு இடத்திற்கு மாற்றும் பணிகள் நடைபெறவுள்ளது. டெல்லியில் உள்ள ஹனுமன் கோயில் அருகே காஷ்மீரே கேட் ஐஎஸ்பிடி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் வசித்து வருகிறார்கள்.

ஜனவரி மாதம் முதல்

ஜனவரி மாதம் முதல்

இவர்களை வரும் ஜனவரி மாதம் முதல், இரவு தங்கும் விடுதிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக டெல்லியில் உள்ள நகர தங்குமிட மேம்பாட்டு வாரியத்திடம் நகர நிர்வாகம் பேசியுள்ளது. இதற்காக தலைமை பொறியாளர் தலைமையில் 4 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் பல்வேறு துறையினரின் ஒப்புதலுடன் 1000 பிச்சைக்காரர்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்லவுள்ளார்கள். இவர்களில் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவர்கள் காப்பகத்திற்கும், பெண்களாக இருந்தால் பெண்களுக்கான காப்பகத்திலும், குழந்தை என்றால் குழந்தைகள் நல வாரியத்திற்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளார்கள்.

எதிர்க்கும் தொண்டு நிறுவனம்

எதிர்க்கும் தொண்டு நிறுவனம்

இந்த நிலையில் வீடுகள் இல்லாதோர் நலனுக்கான தொண்டு நிறுவனம் ஒன்று டெல்லி அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு மாறாக பிச்சைக்காரர்களை கட்டாயமாக அரசு அப்புறப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார். கடுங்குளிரிலும் வெயிலிலும் உணவு இல்லாமல் அவதிப்படும் பிச்சைக்காரர்களை அரசு காப்பகத்திற்கு கொண்டு சென்று அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவுள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் வரும் செப்டம்பர் மாதம் நடத்தப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+