ஜி 20 உச்சி மாநாடு! டெல்லியிலிருந்து 1000 பிச்சைக்காரர்கள் ஜனவரியில் வெளியேற்றம்! எதிர்க்கும் என்ஜிஓ
டெல்லி: ஜி 20 உச்சி மாநாடு டெல்லியில் அடுத்த ஆண்டு நடைபெறுவதையொட்டி 1000க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படவுள்ளனர். இதற்காக 4 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வீடுகள் இல்லாதோர் நலனுக்கான தொண்டு நிறுவனம் ஒன்று டெல்லி அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய 20 நாடுகளை கொண்டதுதான் ஜி 20 என்ற அமைப்பாகும்.
இந்த கூட்டமைப்பு பொருளாதாரத்தின் மொத்த உலக உற்பத்தியில் 85 சதவீத பங்கை கொண்டுள்ளது. இந்த அமைப்பு நடத்தும் மாநாட்டில் 20 நாடுகளும் நிதி அமைச்சர்களும், வங்கியின் கவர்னர்களும் கலந்து கொள்வர். உலக பொருளாதாரத்தின் முதன்மைச் சிக்கல்களை கலந்து பேசி வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சியை இந்த அமைப்பு செய்து வருகிறது.

மாநாடு
இந்த அமைப்பின் மாநாட்டை ஒவ்வொரு ஆண்டும் இதில் உள்ள உறுப்பு நாடுகள் நடத்தும். அதாவது ஆங்கில அகர வரிசைபடி இந்த மாநாடுகளை ஒவ்வொரு உறுப்பு நாடும் நடத்தும். அந்த வகையில் கடைசியாக இந்தோனேசியா நடத்திய நிலையில் இந்த மாநாட்டை நடத்தும் பொறுப்பு தற்போது இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நம் இந்தியா இந்த ஜி 20 உச்சி மாநாட்டை நடத்துகிறது.

பெருமைமிகு இந்தியா
இது இந்தியர்களுக்கு பெருமை வாய்ந்த விஷயமாகும். அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் இந்தியாவுக்கு முக்கியத்துவத்தையும் கவுரவத்தையும் மரியாதையையும் அளித்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் இந்த மாநாட்டை எந்த வித பிரச்சினையும் இன்றி நல்லபடியாக நடத்த மத்திய அரசு விரும்புகிறது. அதற்கான ஆலோசனை கூட்டங்களையும் நடத்தியுள்ளது.

அடுத்த ஆண்டு
இந்த மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த நிலையில் டெல்லியில் உச்சி மாநாடு நடைபெறும் இடத்திற்கு அருகே இருக்கும் பிச்சைக்காரர்களை வேறு இடத்திற்கு மாற்றும் பணிகள் நடைபெறவுள்ளது. டெல்லியில் உள்ள ஹனுமன் கோயில் அருகே காஷ்மீரே கேட் ஐஎஸ்பிடி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் வசித்து வருகிறார்கள்.

ஜனவரி மாதம் முதல்
இவர்களை வரும் ஜனவரி மாதம் முதல், இரவு தங்கும் விடுதிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக டெல்லியில் உள்ள நகர தங்குமிட மேம்பாட்டு வாரியத்திடம் நகர நிர்வாகம் பேசியுள்ளது. இதற்காக தலைமை பொறியாளர் தலைமையில் 4 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் பல்வேறு துறையினரின் ஒப்புதலுடன் 1000 பிச்சைக்காரர்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்லவுள்ளார்கள். இவர்களில் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவர்கள் காப்பகத்திற்கும், பெண்களாக இருந்தால் பெண்களுக்கான காப்பகத்திலும், குழந்தை என்றால் குழந்தைகள் நல வாரியத்திற்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளார்கள்.

எதிர்க்கும் தொண்டு நிறுவனம்
இந்த நிலையில் வீடுகள் இல்லாதோர் நலனுக்கான தொண்டு நிறுவனம் ஒன்று டெல்லி அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு மாறாக பிச்சைக்காரர்களை கட்டாயமாக அரசு அப்புறப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார். கடுங்குளிரிலும் வெயிலிலும் உணவு இல்லாமல் அவதிப்படும் பிச்சைக்காரர்களை அரசு காப்பகத்திற்கு கொண்டு சென்று அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவுள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் வரும் செப்டம்பர் மாதம் நடத்தப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications