ஜி 20 மாநாடு: டெல்லி வந்தார் ஜோ பைடன்.. எங்கே தங்க போகிறார் தெரியுமா.. அடேங்கப்பா இவ்வளவு வசதிகளா!
டெல்லி: டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வந்தடைந்தார். டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா ஓட்டலில் ஜோ பைடன் தங்க உள்ளார்.
டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இந்தியாவில் ஒன்றாக அணி திரண்டு பங்கேற்க உள்ளனர். ரஷ்யா சார்பில் புதின் பங்கேற்கவில்லை. புதினுக்கு பதிலாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்கிறார்.

இதேபோல் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக், சீனா அதிபர் ஜி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலியா பிரதமர், சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் என ஏராளமான தலைவர்கள் டெல்லியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கின்றனர். டெல்லிக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் தங்குவதற்காக டெல்லியில் உள்ள முக்கியமான நட்சத்திர விடுதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
தற்போது உச்ச கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் தலைவர்கள் தங்கும் நட்சத்திர ஓட்டல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஜோ பைடன் டெல்லியில் உள்ள பிரபலமான ஐடிசி மவுரியா, ஓட்டலில் தங்க உள்ளார். ஜோ பைடன் மற்றும் அவருடன் வரும் அதிகாரிகள் குழு, பாதுகாப்பு குழு ஆகியோர் தங்குவதற்காக மொத்தம் 411 அறைகள் ஐடிசி மவுரியாவில் புக் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று மாலை 6.55 மணியளவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்திற்கு ஏர்போர்ஸ் ஒன் என்ற தனி விமானம் மூலம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வந்திறங்கினார். தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா ஓட்டலில் தங்க வைக்கப்பட உள்ளார். புதுடெல்லியில் உள்ள சாணக்கியாபுரி பகுதியில் இருக்கும் ஐடிசி மவுரியா ஓட்டலில் தங்குகிறார்.
அமெரிக்க சீக்ரெட் படையினர் ஹோட்டலில் அனைத்து தளங்களிலும் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகின்றனர். ஹோட்டலுக்கு வெளியேயும் உள்ளேயும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதே விடுதியில் அமெரிக்க முன்னாள் அதிபர்களான ஜார்ஜ் டபிள்யூ. புஷ், பில் கிளிண்டன், பராக் ஒபாமா ஆகியோர் தங்கியுள்ளனர்.

ஜோ பைடன் வருகையை ஒட்டி ஐடிசி ஹோட்டல் வளாகத்தை அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் ஆய்வு செய்து பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். ஜோ பைடன் ஓட்டலின் 13-வது தளத்தில் தங்க உள்ளார். அவர் செல்வதற்காக தனியாக ஒரு பிரத்யேக லிப்ட் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. ஐடிசி மவுரியா ஓட்டலின் ஒவ்வொரு தளத்திலும் அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் எனப்படும் ரகசிய சேவை பிரிவின் கமோண்டாக்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகின்றனர்.
அதேபோல், மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கிளாரிட்ஜ்ஸ் ஓட்டலில் தங்க உள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் இம்பிரியல் ஓட்டலில் தங்க உள்ளார். சீன பிரதமர் தாஜ் பேலஸ் ஓட்டலில் தங்க உள்ளார். தலைவர்களின் வருகையை முன்னிட்டு டெல்லி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது என்று சொல்லும் அளவுக்கு பரப்பாக காட்சி அளிக்கிறது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications