வாகன இன்சூரன்ஸ் புதுப்பிப்பு.. கால அவகாசத்தை நீட்டிக்கவில்லை.. எந்த சலுகையும் கிடையாது..GI அறிவிப்பு
டெல்லி: வாகன ஆவணங்களின் காலாவதி தேதியை மத்திய அரசு நீட்டித்துள்ள நிலையில், வாகன இன்சூரன்ஸ்களை கண்டிப்பாக புதுப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன இன்சூரன்ஸ்களின் காலாவதி தேதி நீட்டிக்கப்படவில்லை, அதை காலாவதி தேதி முடிந்ததும் புதுப்பிக்க வேண்டும் என்று பொது இன்சூரன்ஸ் கவுன்சில் அறிவித்துள்ளது.
ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் காலாவதி தேதி மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் மூலம் நீட்டிக்கப்பட்டது. இதனால் இந்த வருடம் டிசம்பர் 31ம் தேதி வரை ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிக்க வேண்டியது இல்லை.

கொரோனா காரணமாக லாக்டவுன் போடப்பட்டுள்ளது. இதனால் ஆவணங்களை புதுப்பிக்க வேண்டியது இல்லை. மாறாக டிசம்பர் 31ம் தேதி வரை இதே ஆவணங்களை பயன்படுத்தலாம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்தது.
ஓட்டுநர் உரிமம், எப்சி உள்ளிட்ட ஆவணங்களுக்கு இந்த சலுகை பொருந்தும். பிப்ரவரி 1ம் தேதிக்கு பின் காலாவதியான ஆவணங்கள், இனி டிசம்பர் 31 வரை காலாவதியாக உள்ள ஆவணங்கள் அனைத்துக்கும் இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த காலக்கெடு நீட்டிப்பு வாகன இன்சூரன்ஸ்களுக்கு பொருந்தாது என்று பொது இன்சூரன்ஸ் கவுன்சில் தெரிவித்துள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் பொதுத்துறை அமைப்பான பொது இன்சூரன்ஸ் கவுன்சில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி மத்திய அரசின் காலக்கெடு நீட்டிப்பின் கீழ் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வராது. இதனால் மக்கள் தங்கள் வாகன இன்சூரன்ஸ் தேதி முடிவடைந்தால் அதை உடனே புதுப்பிக்க வேண்டும்.
தங்கள் இன்சூரன்ஸ் காலக்கெடு முடியும் போது எல்லோரும் புதுப்பிக்க வேண்டும். இதில் எந்த விதமான சலுகையும் அறிவிக்கப்படவில்லை. இன்சூரன்ஸ் புதுப்பிக்கும் விதியில் தேதி மாற்றங்கள், தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications