Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரண்டாக உடையும் இந்தியா.. எதிர்காலத்தில் இதுதான் நடக்கும்! ஆய்வாளர்கள் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இமயமலை, இந்திய நிலத்தட்டும், யூரேசிய நிலத்தட்டும் மோதியதால் உருவானது. இந்நிலையில் இந்த தட்டுக்கள் விலகி இந்தியா இரண்டாக உடைய வாய்ப்பு இருக்கிறது என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

நெதர்லாந்தின் உட்ரெக்ட் பல்கலைக்கழகத்தின் புவி இயக்கவியல் நிபுணரான ஃபேபியோ கேபிடானியோ இது குறித்து கூறியுள்ளார். அதாவது, "டெக்டானிக் தகடுகள் நகர்வதால்தான் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. உயரமான மலைகளும் இதனால்தான் உருவாகிறது. இன்றைக்கு இருக்கும் இமயமலையும் கூட இப்படித்தான் உருவாகியிருக்கிறது. ஆனால் இதை உருவாக்கிய இதே நில தட்டுக்கள், இந்தியா இரண்டாக உடைவதற்கும் காரணமாக மாறிவிட இருக்கிறது.

earthquake geography

ஆய்வாளர்களுக்கிடையே நீண்ட காலமாக டெக்டோனிக் தகடுகள் நகர்தல் (Tectonic plates unzipping) எனும் கருதுகோள் இருந்து வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட காலம் வரை ஒன்றாக இருக்கும் நில தட்டுக்கள், பின்னர் தானாக பிரிந்து சென்றுவிடும். இந்தியாவிலும் அதுதான் நடக்க இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

உலகம் உருவான காலத்தில் மொத்தமாக ஒரே நிலப்பரப்பாக இருந்தது என்றும், அது பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வெவ்வேறு நிலப்பரப்பாக பல துண்டுகளாக உடைந்தது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்படி உடைந்ததால் உருவானதுதான் ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற கண்டங்கள். பூமியின் சுழற்சி, அதற்கேற்ப மாறும் வானிலை, எரிமலை வெடிப்புகள், விண்கல் தாக்குதல், சூரியன் மற்றும் நிலவின் ஈர்ப்பு சக்தி ஆகியவை நிலப்பரப்பை உடைப்பதிலும் சேர்ப்பதிலும் முக்கிய பங்காற்றுகின்றன.

இந்தியா என்பதும் முழுமையான நிலப்பரப்பு அல்ல என்கிற கருத்தும் ஆய்வாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதாவது, இந்தியா பல்வேறு சிறிய நிலப்பரப்பை உள்ளடங்கிய பெரிய நிலப்பரப்பாக தற்போது இருக்கிறது.

தற்போதைய கூற்றின்படி இந்தியாவின் திபெத் எல்லையில் உள்ள இமயமலை பகுதி இரண்டாக உடைய இருக்கிறது. ஆனால் உடனடியாக இது நடக்காது. குறைந்தபட்சம் சில லட்சம் ஆண்டுகள் ஆகலாம். ஆனால் இதற்கான தொடக்க அறிகுறிகள் தற்போதே கூட தெரிய தொடங்கிவிடும். நிலநடுக்கம் இதன் முதல் அறிகுறி என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கூட திபெத் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 95 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+