அன்புமணி ராமதாஸுக்கே பாமக சொந்தம்.. தேர்தல் ஆணையம் கொடுத்த கடிதம்! முறைகேடு என ஜி.கே.மணி விமர்சனம்
டெல்லி: கடந்த 2023ம் ஆண்டு, பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்திருக்கிறது. எனவே, பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் நீடிக்க 2026ம் ஆண்டு வரை அதிகாரம் இருக்கிறது என்று தேர்தல் ஆணையம் கட்சிக்கு கடிதம் கொடுத்திருக்கிறது. இது ஜனநாயக படுகொலை என கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே.மணி விமர்சித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த ஜிகே மணி கூறியதாவது, "மருத்துவர் அன்புமணி 2023 பொது குழுவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2026 ஆம் ஆண்டு வரை தலைவராக நீடிப்பார் என்று தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்திருக்கிறது.

கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி சென்னை திருவேற்காட்டில், பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அடுத்த நாள், அதாவது மே மாதம் 29ஆம் தேதி, அன்புமணி ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார்.
அதில் தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும், இதர நிர்வாகிகளை குறிப்பிட்டும் எழுதி இருந்தார். அப்படியெனில் அவரது பதவி காலம் 3 ஆண்டுகளில் முடிந்து விட்டது. ஆனால் 2023 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்ததாகவும், அதில் அன்புமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், எனவே அவரது பதவி காலம் 2026 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் எனவும், தேர்தல் ஆணையம் தற்போது கூறியிருக்கிறது. இப்படி சொல்வதன் மூலம் கட்சியை தேடியதற்கு தேர்தல் ஆணையம் துணை போயிருக்கிறது.
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நாங்கள் டெல்லியில் போராட்டத்தை நடத்துவோம்" என்று ஜி.கே.மணி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
-
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
பெண்களின் திருமண வயது 21 ஆகும்.. மகளிர் அனைவருக்கு மாதம் ரூ.2000! ஆஃபர்களை அள்ளி வீசிய அன்புமணி! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?












Click it and Unblock the Notifications