அன்புமணி ராமதாஸுக்கே பாமக சொந்தம்.. தேர்தல் ஆணையம் கொடுத்த கடிதம்! முறைகேடு என ஜி.கே.மணி விமர்சனம்
டெல்லி: கடந்த 2023ம் ஆண்டு, பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்திருக்கிறது. எனவே, பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் நீடிக்க 2026ம் ஆண்டு வரை அதிகாரம் இருக்கிறது என்று தேர்தல் ஆணையம் கட்சிக்கு கடிதம் கொடுத்திருக்கிறது. இது ஜனநாயக படுகொலை என கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே.மணி விமர்சித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த ஜிகே மணி கூறியதாவது, "மருத்துவர் அன்புமணி 2023 பொது குழுவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2026 ஆம் ஆண்டு வரை தலைவராக நீடிப்பார் என்று தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்திருக்கிறது.

கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி சென்னை திருவேற்காட்டில், பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அடுத்த நாள், அதாவது மே மாதம் 29ஆம் தேதி, அன்புமணி ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார்.
அதில் தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும், இதர நிர்வாகிகளை குறிப்பிட்டும் எழுதி இருந்தார். அப்படியெனில் அவரது பதவி காலம் 3 ஆண்டுகளில் முடிந்து விட்டது. ஆனால் 2023 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்ததாகவும், அதில் அன்புமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், எனவே அவரது பதவி காலம் 2026 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் எனவும், தேர்தல் ஆணையம் தற்போது கூறியிருக்கிறது. இப்படி சொல்வதன் மூலம் கட்சியை தேடியதற்கு தேர்தல் ஆணையம் துணை போயிருக்கிறது.
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நாங்கள் டெல்லியில் போராட்டத்தை நடத்துவோம்" என்று ஜி.கே.மணி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications