வயதான பெற்றோரை கவனித்துக்கொள்ள அரசு ஊழியர்கள் 30 நாள் விடுப்பு எடுக்கலாம்.. மத்திய அரசு அதிரடி
டெல்லி: வயதான பெற்றோரை கவனித்துக்கொள்ள அரசு ஊழியர்கள் 30 நாள் விடுப்பு எடுக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜ்யசபாவில், அரசு ஊழியர்கள் தங்கள் வயதான பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக விடுப்பு எடுக்க ஏதேனும் விதிமுறைகள் உள்ளதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், "மத்திய அரசு ஊழியர்கள் தங்களது வயதான பெற்றோர்களை கவனித்துக் கொள்வது உட்பட, தனிப்பட்ட காரணங்களுக்காக 30 நாட்கள் வரை விடுப்பு எடுக்க முடியும்" என்று கூறினார்.
மத்திய அரசு ஊழியர்கள் தங்களது வயதான பெற்றோர்களை கவனித்துக் கொள்வது உட்பட, தனிப்பட்ட காரணங்களுக்காக 30 நாட்கள் வரை விடுப்பு எடுக்க முடியும் என்று மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

இது தொடர்பாக ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பப்பட்டது. அரசு ஊழியர்கள் தங்கள் வயதான பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக விடுப்பு எடுக்க ஏதேனும் விதிமுறைகள் உள்ளதா என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜிதேந்திர சிங், "மத்திய குடிமைப் பணிகள் (விடுப்பு) விதிகள், 1972-ன் படி, மத்திய அரசு ஊழியர் ஒருவர் ஆண்டுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு, 20 நாட்கள் அரை சம்பள விடுப்பு, 8 நாட்கள் சாதாரண விடுப்பு மற்றும் இரண்டு நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுப்பு எடுக்கலாம். இந்த விடுப்புகளை வயதான பெற்றோரை கவனிப்பது உட்பட எந்தவொரு தனிப்பட்ட காரணங்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.
-
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு












Click it and Unblock the Notifications