ஜம்மு காஷ்மீரில் மருந்து உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடா.. ஆளுநர் சத்யபால் விளக்கம்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் மறுத்துள்ளார். கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என்றும் ஆளுநர் உறுதி அளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து (370வது பிரிவு) கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அன்று முதல் தற்போது வரை தொடர்ந்து 21 நாள்காக சந்தைகள், கடைகள் மற்றும வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு கிடைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதேபோல் பொதுபோக்குவரத்து பெரிய அளவில் முடங்கி கிடப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மருந்துகள், காய்கறிகள், உணவுப்பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் பரவியது. இதனை ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லிக்கு டெல்லியில் இறுதி அஞ்சலி செலுத்த வந்த சத்யபால் மாலிக், இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், "ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மருந்து உள்பட எந்த ஒரு அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை. நாங்கள் வீடுகளுக்கு கறிகள், காய்கறிகள், மற்றும முட்டைகள் என அனைத்தும் பக்ரீத்தின் போது வழங்கி உள்ளோம்.
உங்கள் அபிப்ராயங்கள் இன்னும் 10 அல்லது 15 நாளில் மாறிவிடும். காஷ்மீர் பள்ளத்தாக்கில் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுபபாடுகள் தளர்த்தப்பட உள்ளது. காஷ்மீரில் கட்டுப்பாடுகளுக்கு அமல்படுத்தும் முன்பு வன்முறையில் 50 பேர் வரை உயிரிழந்து இருக்கிறார்கள். ஆனால் தற்போது எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. உயிரிழப்பு இல்லாமல் அமைதியான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" இவ்வாறு கூறினார்.
முன்னதாக ஜம்மு காஷ்மீரில் உள்ள மாவட்ட நீதிபதி சாகித் சௌத்ரியும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மருத்து தட்டுப்பாடு ஏற்படவே இல்லை என்று மறுத்துள்ளார். இதனிடையே ஜம்மு காஷ்மீரில் ஓரளவு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதாகவும் லேண்ட் லைன் தொலைத்தொடர்பு சேவைகள் பெரும்பாலான இடங்களில் இயங்குவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications