Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

33% இடஒதுக்கீடு! “பெண்கள் முன்னேற்றத்தில் முக்கியமான மைல்கல் இது..” தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மகளிர் அமைப்பினர், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் நீண்ட கால கோரிக்கையான மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஜி20 நாடுகளின் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த கையோடு தற்போது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. இன்று முதல் வரும் 22ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று நிகழ்வுகள் அனைத்தும் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இரண்டாம் நாளான நாளை முதல் கூட்டத்தொடரின் கடைசி நாள் நிகழ்வு வரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுகிறது.

 Governor Tamilisai Soundararajan said that 33 percent reservation for women is welcome

முதல் நாள் கூட்டத் தொடர் முடிந்த நிலையில் மாலை 6.30 மணியளவில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1996ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு அரசியலமைப்பு சட்டத்தின் 81வது பிரிவில் திருத்தத்தை கொண்டு வந்து நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மூன்றில் ஒரு பங்கு இடம், பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று முதல் முறையாக மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தது.

ஆனால் போதிய ஆதரவு இல்லாததால் இந்த மசோதா தோல்வியடைந்தது. இதனையடுத்து இரண்டு முறை என 90களில் மொத்தம் 3 முறை இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் தோல்வியடைந்தது. இதனையடுத்து இதே காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கடந்த 2010ம் ஆண்டு மீண்டும் இந்த மசோதாவை தாக்கல் செய்தது. மாநிலங்களவையில் இது நிறைவேற்றப்பட்ட நிலையில் மக்களவையில் தோல்வியடைந்தது.

சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் அப்போது இந்த மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதா நிறைவேற்றப்படாமல் தோல்வியடைந்தது. இதனையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ், இடதுசாரிகள், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தின. இந்த சூழலில் தற்போது பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மத்திய அரசின் முடிவை வரவேற்பதாக கூறியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது, "மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஏனென்றால் புதிய பாராளுமன்றத்தில் புதிய புரட்சி என்று இதை சொல்ல வேண்டும். இந்த மசோதா அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உடனடியாக நாடாளுமன்றத்தில் மக்கள் அவையில் தாக்கல் செய்யப்படும். என்ன மசோதா நெடு நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து கட்சிகளும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய சூழ்நிலை வரும்.

பெண்கள் அரசியலுக்கு வந்து ஆளுமையாக உருவெடுப்பதற்கு எவ்வளவு சிரமப்பட வேண்டியுள்ளது என்பது ஒரு பெண்ணாக எனக்கு தெரியும். பாஜகவை பொறுத்த அளவில் இந்த 33 சதவீத இட ஒதுக்கீட்டை 10 ஆண்டுகளுக்கு முன்னரே கட்சிக்குள் கொடுக்க தொடங்கி விட்டார்கள். எனவே எங்களைப் போன்ற பெண்கள் கட்சி நிர்வாகத்திற்கு வர வாய்ப்பு இருந்தது. இப்போது இந்த இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதன் மூலம் ஆட்சி அதிகாரத்திலும் பெண்கள் அதிக அளவில் வர வாய்ப்பு இருக்கிறது. இந்த நடவடிக்கை பெண்கள் முன்னேற்றத்தில் மிக முக்கியமான மைல்கல்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+