சென்னை ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி இடையே ரயில் பாதை.. ரயில்வே அமைச்சர் பதில்
டெல்லி: சென்னையின் புறநகர் பகுதிகளான ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி இடையே ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும் என லோக்சபாவில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்தார்.
சென்னையில் தாம்பரம் செங்கல்பட்டு மார்க்கமாக ஒரு ரயில் பாதையும், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் வழியாக இன்னொரு பாதையும், ராயபுரம், பொன்னேரி, தடா என மூன்றாவது பாதையும் உள்ளது. இதுதவிர சென்னை நகருக்குள் கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில் பாதையும் உள்ளது.

இந்நிலையில் சென்னையின் புறநகர் பகுதிகளான ஆவடி, கூடுவாஞ்சேரி, ஸ்ரீபெரும்புதூரை இணைக்கும் வகையில் சாலைகள் உள்ள போதிலும் ரயில் பாதைகள் இல்லை.இந்த பகுதிகளில் தான் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் உள்ளன. தற்போது செங்கல்பட்டில்இருந்து ஆவடி செல்ல வேண்டும் என்றால் சென்னை வந்து தான் செல்ல வேண்டும். ஸ்ரீபெரும்புதூருக்கு ரயில் பாதை என்பதே கிடையாது.
இதுதொடர்பாக திமுக குழுத் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்பியுமான டி.ஆர். பாலு லோக்சபாவில் கேள்வி எழுப்பினார். அதில், சிறிய ரயில் வழித்தடமான ஆவடி ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி இடையே ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டால், சென்னையில் இருந்து வரும் பயணிகளுக்கு போக்குவரத்து நெரிசல் என தெரிவித்தார்.
அதற்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்துப் பேசும் போது நாடு முழுவதும் பல ரிமோட் பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதிகளுக்கு ரயில் தொடர்பு வசதி ஏற்படுத்தப்பட வேண்டி உள்ளது. உறுப்பினர் (டி.ஆர். பாலு) எழுப்பிய கோரிக்கை குறித்து ஆராயப்படும். சாத்திக்கூறுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டால் இத்திட்டம் செயல்படுத்தப்படும்' என்று விளக்கம் அளித்தார்..
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு












Click it and Unblock the Notifications