31,000 கோடி நிதி .. 3.5 கோடி கட்டடத் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு
டெல்லி: கட்டிடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான 31,000 கோடி நிதியை பயன்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது இதன் மூலம் 3.5 கோடி தொழிலாளர்கள் பயனடைய வாய்ப்பு உள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் வேகமாக பரவி வருவது ஒருபுறம் என்றால், மறுபுறம் 21 நாட்கள் ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அன்றாட கூலித்தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து, தவித்து வருகிறார்கள். சிறு வியாபாரிகள் கடைகள் வைக்க முடியாமலும், ஆட்டோ, கார் ஓட்டிகள் வாகனத்தை இயக்கி வருமானம் ஈட்ட முடியாமல் தவிக்கிறார்கள்.
கட்டிடங்கள் கட்ட அரசு 21 நாட்களுக்கு தடை விதித்துள்ளதால் கட்டிட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாட கூலித்தொழிலாளர்களான இவர்கள் ஒவ்வொரு நாளும் வேலைக்கு சென்றால் அன்றைக்கு சோறு என்ற நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது ஊரடங்கால் வேலையும் இல்லாமல் வருமானமும் இல்லாமல் முடங்கி போய் உள்ளனர்.
இவர்களுக்கு மத்திய அரசு ஏதேனும் உதவிகளை அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், கட்டிடத் தொழிலாளர்களுக்கான சேமநல நிதியாக 31,000 கோடி நிதியை பயன்படுத்துமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த நிதியினை அரசுகள் பயன்படுத்துவதன் மூலம் நாடு முழுவதும் பதிவு செய்துள்ள 3.5 கோடி கட்டடத் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications