ஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பு ரூ.40 லட்சமாக உயர்வு.. சிறு வணிகர்களுக்கு மத்திய அரசு பம்பர் பரிசு!
டெல்லி: வணிக நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி வரி விலக்கை இரட்டிப்பாக்கி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 32வது கூட்டம் டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்றது. தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் இதில் பங்கேற்றனர்.

ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பின்னர் நிருபர்களிடம் அருண்ஜெட்லி கூறியதாவது: 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் ஆகும்போது ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்ற வரம்பு, இனிமேல் 40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. எனவே இனிமேல், 40 லட்சம் ரூபாய் வரை வர்த்தகமாகும் போது அதற்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டியது கிடையாது.
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மலைப்பகுதி மாநிலங்களில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு முன்பு ஜிஎஸ்டி உச்ச வரம்பு, 10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அது இனிமேல் 20 லட்சமாக உயர்த்தப்படும். 20 லட்சத்துக்கு மேலே வர்த்தகம் செய்தால் ஜிஎஸ்டி செலுத்தினால் போதுமானது.
கேரளாவைப் பொறுத்த அளவில் அதிகபட்சமாக, 1 சதவீதம் வரை செஸ் வரி வசூலித்துக் கொள்ளலாம். ஆனால் இது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
Chaired 32nd meeting of the GST Council, Delhi, January 10, 2019 pic.twitter.com/oVIZnbRhhw
— Arun Jaitley (@arunjaitley) January 10, 2019
மேலும், இதுவரை, விற்பனை வணிகங்களுக்கு மட்டும் இருந்து வந்த காம்போஷிசன் ஸ்கீம் எனப்படும் சலுகை திட்டம், இனி, சேவைத் துறை சார்ந்த வணிகங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார்.
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பொறுத்தளவில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு பிறகு கடுமையான நெருக்கடியை சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் லோக்சபா தேர்தல் நெருங்கிவரும் நிலையில், வணிக நிறுவனங்களுக்கான, ஜிஎஸ்டி வரி, வரம்பு இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications