ஜி.எஸ்.டி.யை எளிமையாக்க… தொழில் முனைவோருகாக தனி இலாகா… காங்., வாக்குறுதி
டெல்லி: ஜி.எஸ்.டி.யை எளிமையாக்குவதற்கு தனியாக ஒரு துறையே உருவாக்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
17 வது மக்களவை தேர்தலை ஒட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு பேசிய அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டமும், விவசாயிகளின் பிரச்சனையும் அதிகம் உள்ளதாக குறிப்பிட்டார்.
பாஜக அரசில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் அதனை மறுசீரமைக்கும் விதமாகவும் ராகுல் பேச்சு அமைந்தது.
தொழில்முனைவோர், முதலீடு, தொழில்நுட்பம், நிதியளிப்பு, உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தை உள்ளிட்ட அனைத்து வணிக நடவடிக்கைக்கும், தொழில் முனைவோருக்கும் உதவும் விதமாக, தனி இலாக்கா உருவாக்கப்படும் என ராகுல் தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தரப்படும் என்றும், தொழில் தொடங்கும் பெண்களுக்கு கடன் உதவி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான முயற்சியில், சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட வணிகங்களில் முதலீடு செய்ய குறைந்த செலவு, நீண்டகால நிதியை வழங்குவதற்கான சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தை தேர்தல் அறிக்கையாக காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில், பொதுத்தேர்தல் ஏப்ரல் 11 மற்றும் மே 19 இடையே ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications