2022 ஆம் ஆண்டு வரை சமூக விலகலை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்.. அதிர வைக்கும் அமெரிக்க ஆய்வு
டெல்லி: கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை அதாவது 2022 ஆம் ஆண்டு வரை நாம் சமூக இடைவெளியை கடைப்பிடித்துதான் ஆக வேண்டும் என ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
Recommended Video
கொரோனா எனும் ஆட்கொள்ளி வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. இதற்கு இன்னும் தடுப்பு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் மக்கள் இந்த நோயிலிருந்து மீள்வதற்கு சமூக இடைவெளியை கடைப்பிடிக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோவிட் 19 வைரஸிலிருந்து தப்பிக்க 2022-ஆம் ஆண்டு வரை நாம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

முக்கிய விஷயங்கள்
இதுகுறித்து அந்த பல்கலைக்கழகத்தின் சுகாதாரத் துறை வெளியிட்ட ஆய்வில் கூறுகையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சை இல்லாத நிலையில் கான்டாக்ட் டிரேசிங், தனிமைப்படுத்துதல், தனிமைப்படுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட முக்கிய விஷயங்களை கடைப்பிடித்தால் வைரஸ் தொற்றிலிருந்து தப்பலாம்.

வைரஸ்
சமூக இடைவெளி நடவடிக்கையானது 25 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை தற்போது முதல் 2022 வரை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். கொரோனா பாதித்த ஒருவர் நெகடிவ் என வந்தபிறகு அவர்களுக்கு கொரோனா வருகிறது. கடந்த வாரம் தென்கொரியாவில் கொரோனா பாதித்த 50-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பாதிப்பு
அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சையால் அவர்களுக்கு கொரோனா இல்லை என வந்தது. ஆனால் கடந்த வாரம் அவர்களுக்கு மீண்டும் கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதை அடுத்து சோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. கடந்த 2003-ஆம் ஆண்டு சார்ஸ் வைரஸ் கட்டுக்குள் வந்த பிறகும் சில கால இடைவெளிக்கு பின்னர் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

வைரஸ்
எனவே கொரோனா வைரஸும் மீண்டும் வர வாய்ப்புள்ளது. சீனாவிலும் தற்போது 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவின் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்த சமூக இடைவெளியை கடைப்பிடிக்காவிட்டால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே 2022 ஆம் ஆண்டு வரை சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என ஆய்வில் தெரிவித்தப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications