“நோ டென்சன்”.. டவர் இன்றி பணம் அனுப்பலாம்! எச்டிஎப்சியின் “சூப்பர் ஆப்” - யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
இணையதள வசதி இல்லாமலேயே பணம் அனுப்பும் வகையிலான புதிய செயலியை எச்டிஎப்சி வங்கி அறிமுகம் செய்து இருக்கிறது.
டெல்லி: டிஜிட்டல் மூலமாக வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை அனுப்புவதற்கு இணையதள இணைப்பு தேவைப்பட்டு வந்த நிலையில், இணையதள வசதி இல்லாமலேயே பணம் அனுப்பும் வகையிலான புதிய வசதியை அறிமுகம் செய்து இருக்கிறது எச்டிஎப்சி வங்கி. இதன் மூலம் செல்போன் சிக்னல் இல்லாத பகுதிகளிலும் பண பரிவர்த்தனை செய்ய முடியும் என அந்த வங்கி அறிவித்து உள்ளது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கூகுள் பே, பே டிஎம், போன் பே ஆகிய செயலிகளின் வருகைக்கு பிறகு பெரும்பாலான கடைகளில் கியூ ஆர் கோடு மூலம் பணம் அனுப்பி வருகிறார்கள்.
பொதுமக்களும் ஏடிஎம் மையங்களுக்கு சென்று காத்திருக்காமல் இந்த செயலிகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி சாலையோர கடைகள் தொடங்கி வணிக வளாகங்கள் வரை அனைத்திலும் பணத்தை செலுத்தி வருகின்றனர்.

நாட்டிலேயே முதல் முறை
ஆனால், செல்போன் சிக்னல் மோசமாக இருக்கும் பகுதிகளில் இதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் பல்வேறு தர்ம சங்கடங்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் நாட்டிலேயே முதல் முறையாக தனியார் வங்கியான எச்டிஎப்சி, இணையதள இணைப்பு வசதி இல்லாமலேயே டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யும் முறையை அறிமுகம் செய்து இருக்கிறது.

செல்போன் சிக்னலே வேண்டாம்
இந்திய ரிசர்வ் வங்கியின் சாண்ட்பாக்ஸ் திட்டத்தின் கீழ், கிரஞ்ச் ஃபிஷ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள எச்டிஎப்சி வங்கி இந்த வசதியை கொண்டு வந்து இருக்கிறது. இதன் மூலம் மோசமான செல்போன் சிக்னல் உள்ள மழைவாழ் பகுதிகள், வனப்பகுதிகள், கிராம பகுதிகள், புற நகரங்களிலும் தங்கள் வங்கியின் ஆஃப்லைன் பண பரிவர்த்தனை சேவையை பயன்படுத்த முடியும் என்று எச்டிஎப்சி தெரிவிக்கிறது.

ஆஃப்லைன் பண பரிவர்த்தனை
குறிப்பாக அதிகளவில் மக்கள் கூடும் நிகழ்வுகள், பொருட்காட்சிகள், புத்தக கண்காட்சிகள், அடித்தளங்கள், சுரங்க பாதைகள், பார்க்கிங் பகுதிகள், விமான நிலையங்கள் உள்ளிட்டவற்றில் மொபைல் சிக்னல் டிராஃபிக் காரணமாக இணையதள வேகம் மிகக்குறைவாக இருக்கும். அதுபோன்ற சமயங்களில் எச்டிஎப்சியின் ஆஃப்லைன் பணவர்த்தனை வசதி பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வியாபாரிகளும் பயன்படுத்தலாம்
வாடிக்கையாளர் மட்டுமின்றி வியாபாரியும் இந்த ஆப்லைன் பண பரிவர்த்தனை முறையை மேற்கொள்ள முடியும் என்று எச்டிஎப்சி வங்கி தெரிவித்து உள்ளது. வியாபாரியோ அல்லது வாடிக்கையாளரோ மீண்டும் ஆன்லைனுக்கு சென்றபிறகு அந்த பணம் சென்று சேர்ந்துவிடும். அத்துடன் இந்த வசதியை எச்டிஎப்சி வாடிக்கையாளார்கள் மட்டுமின்றி அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களாலும் பயன்படுத்த முடியும்.

4 மாதங்கள் சோதனை ஓட்டம்
இன்விடேசன் லிங் மூலமாக பிற வங்கி வாடிக்கையாளர்கள் இதை பயன்படுத்தலாம் என்று எச்டிஎப்சி தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக 4 மாதங்கள் இதனை சோதனை ஓட்டமாக எச்டிஎப்சி வங்கி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 16 க்கும் அதிகமான நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

புதிய பரிணாமம்
இந்த சோதனை ஓட்ட காலக்கட்டத்தில் அதிகபட்சமாக ரூ.200 மட்டுமே ஆப்லைன் முறைப்படி அனுப்ப முடியும். எச்டிஎப்சி மற்றும் கிரன்ச்பிஷ் இணைந்து உருவாக்கி உள்ள இந்த செயலிக்கு ரிசர்வ் வங்கி கடந்த செப்டம்பர் 2022 ஆம் ஆண்டில் அனுமதி கொடுத்து இருக்கிறது. இந்த சோதனை ஒட்டம் வெற்றியடைந்தால் டிஜிட்டல் பணபரிவர்த்தனையின் அடுத்த பரிணாமத்தை இந்தியா அடையும்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications