எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பூசி... மத்திய அரசு விளக்கம்
டெல்லி : எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது, எத்தனை சுகாதாரப் பணியாளர்களுக்கு போடப்பட்டுள்ளது என்ற விபரத்தை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 துவங்கி நடந்து வருகிறது. மதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இரண்டாவது கட்ட தடுப்பூசி போடும் பணி பிப்ரவரி 13 ம் தேதி துவங்க உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இன்று மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி செய்தியாளர்களை சந்தித்து, இது எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தார்.
அவர் கூறுகையில், 2021 பிப்ரவரி 6 ம் தேதி மாலை 6 மணி நிலவரப்படி, இதுவரை 56,36,868 பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 52,66,175 பேர், அதாவது 54.7 சதவீதம் பேர் சுகாதாரப்பணியாளர்கள். பிப்ரவரி 2 ம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தும் பணியை துவங்க உள்ளோம். இதில் 3,70,693 முன்கள பணியாளர்களுக்கு, அதாவது 4.5 சதவீதம் பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது.
டாப் 13 மாநிலங்களில் 60 சதவீதத்திற்கும் மேலான சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இதில் பீகார் 76.6 %, மத்திய பிரதேசம் - 76.1 %, திரிபுரா - 76%, உத்திரகாண்ட் - 71.5 %, மிசோரம் 69.7 %, உத்திர பிரதேசம் - 69 %, கேரளா - 68.1 %, ஒடிசா - 67.6 %, ராஜஸ்தான் - 67.3 %, இமாச்சல பிரதேசம் - 66.8 %, லட்சத்தீவு - 64.5 %, அந்தமான் - 62.9 %, சட்டீஸ்கர் - 60.5 %.
12 மாநிலங்களில் 40 சதவீதத்திற்கும் குறைவாகவே தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. அதில், அசாம் - 39.9 %, டெல்லி - 37.1 %, பஞ்சாப் - 33.7 %, ஜம்மு-காஷ்மீர் - 33.6 %, தந்ரா - நகர் ஹவேலி - 31.9 %, லடாக் - 31.7 %, தமிழகம் - 28 %, மேகாலயா - 21.7 %, நாகாலாந்து - 21 %, மணிப்பூர் - 17.4 %, புதுச்சேரி - 13.6 %.
கோவிட் மருத்துவமனைகளில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சைக்கு பிறகு 19 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications