Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிரகணத்தின் போது நிலவை பாம்பு விழுங்குமா? உணவு சாப்பிடலாமா? 3 முக்கிய கட்டுக்கதைகள் என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சூரிய கிரகணத்தின் போது உணவு குறித்து கட்டுக்கதைகள் பரப்பப்படுகின்றன. அவை என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டு புள்ளியாக சந்திரன் வரும். அப்போது சூரியனை சந்திரன் மறைப்பதால் கிரகணம் ஏற்படுகிறது.
சூரிய கிரகணத்தின் போது சந்திரன் பூமியில் இருந்து சுமார் 2.23 லட்சம் மைல்கள் தொலைவில் காணப்படும்.

Here are 3 myths for food in Solar Eclipse 2024

இதனால் சந்திரன், பூமிக்கு அருகே காணப்படுவதால் வானில் சந்திரன் பெரியதாக தெரியும். இதனால் சூரிய கிரகணத்தின் போது இருள் இருக்கும். இதற்கு முன்னர் இது போன்ற சூரிய கிரகணம் 1973 ஆம் ஆண்டு நிகழ்ந்தது.

இதன் பின்னர் 2150 ஆம் ஆண்டு வரை இது போன்ற ஒரு அரிய கிரகணம் நடைபெறாது என்கிறார்கள். சூரிய கிரகணம், முழு சூரிய கிரகணம், வளைய கிரகணம், பகுதி கிரகணம், முழு சூரிய கிரகணம் இணைந்த சூரிய கிரகணம் என 4 வகைகள் உள்ளன. இதில் நிலவு முழுமையாக மறைக்கும் முழு சூரிய கிரகணமே இன்று நடைபெறுகிறது.

இந்த கிரகணங்களின் போது விஞ்ஞான ரீதியில் நிறைய விஷயங்கள் சொல்லப்படும். அதில் ஒன்று சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. அப்படி பார்த்தால் ரெடினாவுக்கு பாதிப்பு ஏற்பட்டு கண் பார்வையே பறி போகும் பாதிப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் சூரிய கிரகணத்தின் போது சில கட்டுக்கதைகளும் கட்டவிழ்க்கப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமானது. சந்திர கிரகணம் என்றால் சந்திரனை பாம்பு விழுங்குவது என கட்டுக்கதைகளை கூறுவதை நாம் சிறு வயதில் கேட்டிருக்கிறோம். அதன் பின்னர்தான் பூமியின் நிழலில் சந்திரன் செல்வதால் அது சந்திர கிரகணம் என்றும் சூரியனை சந்திரன் மறைப்பதால் ஏற்படுவது சூரிய கிரகணம் என்றும் சொல்லப்படுகிறது.

இதுபோன்று உணவு தொடர்பாக 3 கட்டுக்கதைகள் உள்ளன. அவற்றையும் பார்ப்போம்.

கட்டுக்கதை1: சூரிய கிரகணத்தின் போது சாப்பிடக் கூடாது

கிரகணத்தின் போது சாப்பிட்டால் எதிர்மறை சக்திகளால் நாம் சாப்பிடும் உணவு கெட்டு போகக் கூடும். இதனால் உடலில் அஜீரண கோளாறுகள் ஏற்படும் என்பது நமது நம்பிக்கை. ஆனால் ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வது என்னவெனில், கிரகணத்தின் போது நிறைய, கடின உணவுகளை சாப்பிடுவதற்கு பதில் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை என்கிறார்கள்.

கட்டுக்கதை 2: கிரகணங்கள் முடிந்த பிறகு மீதமுள்ள உணவை தூக்கி எறிய வேண்டும்.

கிரகணங்கள் முடிந்ததும் நிறைய பேர் மீதமுள்ள உணவை தூக்கி எறிந்து விடுகிறார்கள். கிரகணத்தால் அந்த உணவு கெட்டு போயிருக்குமோ என்பதால் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கூறுகையில், கிரகணத்தின் போது ஏற்படும் கதிர் வீச்சால் உணவு பொருள் கெட்டு போய்விடும் என்றால் மளிகைக் கடைகளில் உள்ள மளிகை பொருட்களும், வயல்களில் உள்ள பயிர்களும் கெட்டு போக வேண்டும் அல்லவா. ஆனால் அப்படி நடப்பதில்லை. எனவே கிரகணத்தின் போது ஏதோ ஒரு காரணத்தால் உணவு கெட்டு போய்விடுவதால் அதற்கு கிரகணத்தின் மீது குற்றம்சாட்டக் கூடாது என்றனர். கிரகணத்தின் போது உணவு கெட்டுவிடும் என்பதற்கான எந்த விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

கட்டுக்கதை 3: உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பது

கிரகணத்தின் போது உணவு உள்கொள்வதில் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்பதை ஊட்டச்சத்து நிபுணர்கள் மறுக்கிறார்கள். கிரகணத்தின் போது உணவை உட்கொண்டு விட்டு நீராகாரங்களை குடித்துவிட்டு தியானத்திலோ அல்லது ரிலாக்ஸாகவோ இருத்தல் வேண்டும் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+