பராமரிப்பு பணியின்போது ஏவுகணை கிளம்பி பாகிஸ்தான் போய் விட்டது.. ராஜ்யசபாவில் ராஜ்நாத்சிங் விளக்கம்
டெல்லி: இந்திய ஏவுகணை பாகிஸ்தானில் தவறுதலாக விழுந்தது தொடர்பாக உயர்நிலை விசாரணை நடைபெற்று வருவதாக ராஜ்யசபாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் நகரில் ஏவுகணைகள் பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது. கடந்த 9-ந் தேதியன்று ஏவுகணைகளில் ஒன்று தவறுதலாக விண்ணில் சீறிப் பாய்ந்தது. 40,000 அடி உயரத்தில் பறந்த இந்த ஏவுகணை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மியான் கன் நகரில் குடியிருப்புகள் மீது விழுந்தது. இதில் குடியிருப்புகள் மட்டும் சேதமடைந்தன. இந்த ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தானுக்குள் விழுந்ததில் யாரும் உயிரிழக்கவில்லை.

பாக். கண்டனம்
இந்திய ஏவுகணை தங்கள் நாட்டுக்குள் தவறுதலாக விழுந்த விவகாரத்தை பாகிஸ்தான் பெரிதுபடுத்தி வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தானுக்கான இந்திய தூதரை அழைத்து நேரில் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்த விவகாரத்தை எழுப்புவோம் என்றது பாகிஸ்தான்.

மத்திய அரசு விளக்கம்
இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்திருந்தது. அந்த விளக்க அறிக்கையில், ஏவுகணை பராமரிப்பு பணிகளின் போது தவறுதலாக விண்ணில் சீறிப் பாய்ந்தது. இது வருத்தத்துக்குரியதுதான். இது தொடர்பாக ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் பாகிஸ்தான் இந்த விளக்கத்தை ஏற்கவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவின் ஏவுகணை விழுந்தபோது பதிலடி தந்திருக்க முடியும். ஆனாலும் பொறுமை காத்தோம். ராணுவத்தையும் நாட்டையும் பலப்படுத்த வேண்டும் என இம்ரான் கான் கூறியிருந்தார்.

ராஜ்நாத்சிங் விளக்கம்
இந்நிலையில் ராஜ்யசபாவில் இன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று ஏவுகணை விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய ராஜ்நாத்சிங், ஏவுகணை பராமரிப்பு பணியின் போது தவறுதலாக விண்ணில் பாய்ந்தது. பாகிஸ்தான் குடியிருப்புகள் மீது ஏவுகணை விழுந்தது. இதில் உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக உயர்நிலை விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

அமெரிக்கா,சீனா
இதனிடையே இந்திய ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்தது தவறுதலாக நிகழ்ந்த ஒரு விபத்துதான் என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இதேபோல் சீனாவும் இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; ஏவுகணை தவறுதலாக விழுந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என சீனா கூறியுள்ளது.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications