எதிர்ப்பே கூடாது.. இந்தி மொழியை அனைவரும் ஏற்க வேண்டும்! மத்திய அமைச்சர் அமித்ஷா பரபர பேச்சு!
டெல்லி: ‛‛தற்போது இந்தி மொழி ஏற்பு என்பது குறைவாக உள்ளது. இருப்பினும் எந்த எதிர்ப்பும் இன்றி இறுதியில் இந்தி மொழியை அனைவரும் ஏற்க வேண்டும்'' என அலுவல் மொழிக்கான 38 வது நாடாளுமன்ற குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
மத்திய அரசு இந்தியை திணிப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. இந்த குற்றச்சாட்டை மத்திய அரசும், பாஜக தலைவர்களும் மறுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் நேற்று அலுவல் மொழிக்கான 38 வது நாடாளுமன்ற குழுக்கூட்டம் டெல்லியில் நடந்தது.

இந்த கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அமித்ஷா ‛‛இந்தி மொழியை அனைவரும் எதிர்ப்பு இன்றி ஏற்க வேண்டும்'' என பேசியுள்ளார். இதுதொடர்பாக அமித்ஷா பேசியதாவது:
இந்தி மொழி என்பது உள்ளூர் மொழிகளுக்கு போட்டியானதாக இல்லை. அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிப்பதன் மூலமாகவே நாடு அதிகாரமிக்கதாக மாறும். இந்தி மொழியை ஏற்றுக்கொள்வதன் வேகம் என்பது குறைவாக உள்ளது. இருப்பினும் இறுதியில் எதிர்ப்பு இன்றி இந்தி மொழியை ஏற்க வேண்டும். ஏனென்றால் இந்தி என்பது உள்ளூர் மொழிகளுக்கு போட்டியில்லை.
பிரதமர் நரேந்திர மோடி ஐந்து சபதங்களை முன்னெடுத்துள்ளார். அதில் ஒன்று இந்தியாவின் பாரம்பரியத்தை காப்பது மற்றும் காலனித்துவ அடையாளங்களை அழிப்பது உள்ளிட்டவையும் அடங்கும். இந்த 2 சபதங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் அனைத்து இந்திய மொழிகளையும், ஆட்சி மொழியையும் வலிமைப்படுத்த வேண்டும்.
நாம் பேசும் மொழிக்கு மதிப்பளிக்காமல் பாரம்பரியத்தை மீட்க முடியாது. அதோடு ஒவ்வொரு உள்ளூர் மொழிகளுக்கும் மரியாதை கொடுக்கும்போது தான் ஆட்சி மொழிக்கான அங்கீகாரம் என்பது கிடைக்கும். பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் ஒருபோதும் ஆங்கில மொழியில் உரை நிகழ்த்தியது இல்லை. அதேபோல் மத்திய அமைச்சர்களும் இந்தி மொழிகளில் உரை நிகழ்த்தி வருகின்றனர்.
இது நம் நாட்டின் பல்வேறு மொழிகளை இணைக்கும் நடவடிக்கைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. அலுவல் ரீதியான மொழிகளை ஏற்றுக்கொள்வது என்பது ஒரு சட்டம், சுற்றிக்கை உள்ளிட்டவற்றால் வரவில்லை. மாறாக நல்லெண்ணம் அடிப்படையில் வருகிறது.நாட்டில் இந்திய மொழிகளுக்கான அகராதிகள் அப்படியே உள்ளன. இது ஒரு பெரிய சாதனை'' என்றார்.
-
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி












Click it and Unblock the Notifications