ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தி பேசத் தொடங்குங்கள்.. அமித் ஷா அதிரடி பேச்சு
டெல்லி: ‛‛இந்தியாவில் உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
Recommended Video
மத்திய அரசின் இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ச்சியாக தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு துவக்கம் முதலே தமிழகத்தில் இருந்த எதிர்ப்பும் இன்னும் மாறவில்லை.
சமீபத்தில் மும்மொழி கல்வி கொள்கையையும் திமுக, அதிமுக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதுவும் ஒருவகை இந்தி திணிப்பு தான் என திமுக கூறிய நிலையில் தமிழகத்தில் இருமொழி கல்வி கொள்கை தான் பின்பற்றப்படும் என அதிமுக அரசு கூறியது. இதற்கு தமிழகத்தில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது.

அலுவல் மொழிக்கமிட்டி கூட்டம்
இந்நிலையில் தான் டெல்லியில் பாராளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 37வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் மந்திரி அமித்ஷா தலைமை வகித்தார். அப்போது கமிட்டியின் 11வது ‛வால்யூம்' ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்க ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:-

70 சதவீதம் இந்தி
பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை எளிமையாக மாற்றாத வரையில் அது பரப்பப்படாது. மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவை கொடுக்க வேண்டியது அவசியம். இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

வடகிழக்கு மாநிலங்களில்...
மேலும் வடகிழக்கு மாநிலங்களில் 22,00க்கும் மேற்பட்ட இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஒன்பது பழங்குடி சமூகங்கள் தங்கள் பேச்சுவழக்குகளை ஹிந்திக்கு மாற்றியுள்ன. அங்குள்ள 8 மாநிலங்களும் 10ம் வகுப்பு வரை பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்க ஒப்புக்கொண்டன.

ஆங்கிலத்துக்கு மாற்றாக
அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, நிசித் பிராமானிக் உள்பட கமிட்டி உறுப்பினர்கள் இருந்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications