மார்ச் 'டூ' மே.. இயல்பை விட அதிக வெயில்.. தென் மாநிலங்களின் நிலை என்ன? - வானிலை மையம் ரிப்போர்ட்
டெல்லி: இந்தியாவின் சில பகுதிகளில், மார்ச் முதல் மே மாதம் வரை பகல் நேரத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடகிழக்கு, கிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
மார்ச் முதல் மே வரையிலான கோடைகால கணிப்பிற்கு பிறகு இத்தகவலை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், தென் மாநிலங்கள் அருகிலுள்ள மத்திய மாநிலங்களில் இந்தியாவிலும் வெப்பநிலை இயல்பை விடக் குறைவாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.

மத்திய இந்தியா
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எதிர்வரும் கோடைக் காலத்தில் (மார்ச் முதல் மே வரை), வடக்கு, வடமேற்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் பெரும்பாலான துணைப்பிரிவுகளில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும். மத்திய இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலிருந்து சில துணைப்பிரிவுகள் மற்றும் சில கடலோர துணைப்பிரிவுகளிலும் வெப்பநிலை அதிகமாக இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் டூ மே
சத்தீஸ்கர், ஒடிசா, குஜராத், கடலோர மகாராஷ்டிரா, கோவா மற்றும் கடலோர ஆந்திராவில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. "பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, கிழக்கு உ.பி., மேற்கு உ.பி., சத்தீஸ்கர், ஜார்கண்ட் முதல் ஒடிசா மாநிலங்களில் மார்ச் டூ மே வரை வெப்பநிலை 0.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருக்கும்" என்று எதிர்பார்க்கப்படுவதாக ஐஎம்டி இயக்குநர் மிருதுஞ்சய் மோகபத்ரா கூறியுள்ளார்.

0.86 டிகிரி செல்சியஸ் வரை
குறிப்பாக, சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் இயல்பான வெப்பநிலையை விட வெப்பம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு 75 சதவிகிதம் இருக்கிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும், வெப்பநிலை முறையே 0.86 டிகிரி செல்சியஸ் மற்றும் 0.66 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

தென் இந்தியா நிலைமை
ஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லியில் இயல்பான வெப்பநிலையை விட கூடுதலாக வெப்பம் வீச 60 சதவிகிதம் வாய்ப்புள்ளதாகவும் என்று அவர் கூறினார். எனினும், தென்னிந்தியாவின் சில பகுதிகள் இந்த சிக்கலில் தப்பிக்க வாய்ப்புள்ள. "தென் மாநிலங்கள் மற்றும் அதனுடன் இணைந்த மத்திய இந்தியாவின் பெரும்பாலான உட்பிரிவுகளில் இயல்பான கோடை பருவகாலத்தின் அதிகபட்ச வெப்பநிலை குறைவாக இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications