எல்லாம் கொரோனா படுத்தும்பாடு.. சென்னை உள்பட 8 நகரங்களில் புதிய வீடு வாங்க ஆளில்லை.. என்ன காரணம்?
டெல்லி: கொரோனா தொற்றால் இந்தியாவில் 8 முக்கிய முன்னணி நகரங்களில் வீடுகள் விற்பனை 52 சதவீதமாக சரிந்துள்ளதால் ரியல் எஸ்டேட், வீடு விற்பனை செய்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கொரோனா வந்தாலும் வந்தது, மக்களின் வாழ்வாதாரத்தை அப்படியே புரட்டி போட்டுவிட்டது. பொருளாதாரத்தையே முடக்கிவிட்டது. இதனால் உலக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
தற்போது கொரோனா லாக்டவுனில் தளர்வுகள் அளித்துள்ள நிலையில் வீட்டு விற்பனை மந்தகதியில் இருப்பதாக ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் கவலையுடன் தெரிவிக்கிறார்கள்.

புள்ளி விவரங்கள்
இந்த காலாண்டுக்கான விற்பனையை கடந்த 2019-ஆம் ஆண்டு காலாண்டுடன் ஒப்பிட்டு புள்ளி விவரங்கள் வந்துள்ளன. அதன்படி கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விற்பனை படுமந்தமாக உள்ளது. ஏப்ரல் மாதம் 2019 ஆம் ஆண்டு புதிய வீடுகள் விற்பனையாயின. ஆனால் இந்த முறை புது வீடுகளை வாங்க ஆள் இல்லை என கட்டட ஒப்பந்ததாரர்களும் ரியல் எஸ்டேட் அதிபர்களும் கவலை தெரிவித்தனர்.

வீடு வாங்க ஆளில்லை
கடந்த காலாண்டில் இந்த நேரத்தில் பொதுவாக 5 முதல் 6 வீடுகள் விற்பனையாகிவிடும். ஆனால் இந்த முறை வீடு வாங்குவோரை சல்லடை போட்டு தேடினாலும் கிடைக்கவில்லை. ஏற்கெனவே லோன் போட்டு வீடு வாங்கியோரும் மாத தவணை செலுத்த முடியாததால் வீடுகளை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிலும் 25 சதவீதத்திற்கு மேல் தள்ளுபடி விலையில் வீடுகளை விற்க தயாராகியுள்ளனர்.

பொருளாதார மந்த நிலை
இதற்கு முக்கிய காரணம் வேலையின்மை மற்றும் பொருளாதார மந்தநிலையே ஆகும். இந்த கொரோனாவால் 2.1 கோடி பேர் வேலையை இழந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டின் முதல் பாதியில் வீடு விற்பனை 52 சதவீதம் சரிந்துள்ளது. இது மேலும் சரிய வாய்ப்புள்ளதாம். குறிப்பாக டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை, ஹைதராபாத், நவி மும்பை, தாணே, அகமதாபாத் ஆகிய 8 முக்கிய நகரங்களில் வீடு விற்பனை 65 சதவீதம் குறைந்துவிட்டது.

வீடு ஒப்படைப்பு
கொரோனா மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த ஆண்டு இறுதியில் 4.66 லட்சம் வீடுகள் ஓனர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் என்கிறார்கள் ஏஜென்சிகள். 2021ஆம் ஆண்டு மேற்கண்ட நகரங்களில் 4.12 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இப்போது அனைத்தும் தாமதமாகிவிட்டதாக கவலை தெரிவித்துள்ளார்கள். இவை அனைத்தும் கொரோனாவால் நடந்தது. பொருளாதாரம் மீண்டால் மட்டுமே வீட்டு விற்பனை துறை நல்ல நிலையை எட்டும் என்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications