இது என்ன கோரிக்கை? இப்படியெல்லாம் இனி மனு தாக்கல் செய்தால்.. டென்ஷன் ஆன உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் அவ்வப்போது விசித்திரமான சில கோரிக்கைகளுடன் மனு தாக்கல் செய்வதையும் காண முடிகிறது. இந்த மனுக்களுக்காக நேரத்தை வீணடித்ததாக கோர்ட் அபராதத்துடன் தள்ளுபடி செய்யும். அந்த வகையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றை பார்த்ததும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டென்ஷன் ஆகி மனுதாரரை எச்சரித்தார்.
உச்ச நீதிமன்றத்தில் அவ்வப்போது சில விசித்திரமான கோரிக்கைகளுடன் மனு தாக்கல் செய்யப்படுவதையும் காண முடிகிறது. இத்தகைய கோரிக்கைகளுடன் வரும் மனுக்களை விசாரணைக்கு ஏற்காமல் சில சமயம் தள்ளுபடி செய்யப்பட்டு விடும். அதேபோல், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக கடுமையான அபராதமும் மனுதாரருக்கு விதிக்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்காக எத்தனையோ வழக்குக்கள் நிலுவையில் இருக்கும் நிலையில், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் விதமாக சில பொதுநல வழக்குகளும் தாக்கல் செய்யப்படுவதை காண முடிகிறது. அந்த வகையில்தான் இன்று உச்ச நீதிமன்றத்தில் சுரிந்தர் குந்த்ரா என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைத்து எம்.எல்.ஏக்கள், எம்பிக்களையும் டிஜிட்டல் முறையில் 24 மணிநேரமும் கண்காணிக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்ற உடனே எம்.எல்.ஏ, எம்.பிக்கள் செல்லும் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். அவர்களை 24 மணி நேரம் கண்காணிப்பதோடு, அந்த சிசிடிவி காட்சிகளை அனைத்து குடிமக்களும் எப்போதும் பார்க்கும் வகையில், மொபைல் போனில் வழங்க வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது
இந்த மனு தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவில் கோரப்பட்டு இருந்த காரணத்தை பார்த்ததும் டென்ஷன் ஆன தலைமை நீதிபதி, எம்.பி, எம்.எல்.ஏக்களை எப்படி டிஜிட்டல் முறையில் கண்காணிக்க முடியும்? எம்.பி, எம்.எல்.ஏக்களும் தனிநபர் சுதந்திரம் இல்லையா..
இதில் எப்படி நாங்கள் தலையிட முடியும். இதுபோன்ற மனுக்கள் எதிர்காலத்தில் தாக்கல் செய்யக்கூடாது" என்று கூறினார். பொது நேரத்தை வீணடித்ததாக மனுதாரருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்த நீதிபதி..பொறுமையோடு இருப்பதாகவும் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கடுமையாக எச்சரித்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications