வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர்
டெல்லி: அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தம், உலக அரசியலில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இது ஏதோ இரு நாடுகளுக்கு இடையிலான நடக்கும் விஷயம் என்று மட்டும் நாம் கடந்து போய்விட முடியாது. இந்த ஒப்பந்தத்தின் தாக்கம் உங்கள் வீட்டுச் சமையலறை, பெட்ரோல் பங்க், விமானப் பயணம் மற்றும் நீங்கள் மாதாமாதம் கட்டும் வங்கித் தவணை (EMI) வரை எதிரொலிக்கப் போகிறது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக ஐந்து விஷயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.. முதலில் ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும். ஏற்கனவே போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து ஹார்முஸில் கப்பல் போக்குவரத்து ஆரம்பித்துவிட்டது. அடுத்துப் போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீடிப்பது, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவது, புதிய அணுசக்தி பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவது, நிரந்தரத் தீர்வுக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்குவது என 5 முக்கிய பாயிண்டுகள் இதில் இருக்கிறது. மேலும், இந்த போர் நிறுத்தம் சாமானியர்கள் வாழ்க்கையையும் கூட மாற்றப் போகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை
இந்தியாவிற்குத் தேவையான கச்சா எண்ணெய்யில் 85 சதவீதத்திற்கும் அதிகமானவை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில் பெரும் பகுதி வளைகுடா நாடுகளிலிருந்துதான் வருகின்றன. உலக எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதப் பங்கு வகிக்கும் 'ஹார்முஸ் ஜலசந்தி' வழியாகவே இந்த எண்ணெய் கப்பல்கள் வருகின்றன.
ஈரான் - அமெரிக்க மோதலால் இந்தப் பாதையில் பதற்றம் நிலவியபோது, கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இப்போது அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால், ஈரானின் எண்ணெய் சந்தைக்கு மீண்டும் வரும். இதனால் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியுள்ளது. இது இந்திய வாகன ஓட்டிகளுக்குப் பெரிய நிம்மதியைத் தரும். பெட்ரோல், டீசல் விலை குறையவோ அல்லது மேற்கொண்டு உயராமல் இருக்கவோ இது உதவும்.
விமானக் கட்டணங்கள் குறையலாம்
விமான நிறுவனங்களின் மிக பெரிய செலவினமே விமான எரிபொருள் தான். கச்சா எண்ணெய் விலை ஏறும்போது, விமான எரிபொருள் விலையும் உச்சம் தொடும். கடந்த சில வாரங்களாகப் போர் காரணமாக விலை தாறுமாறாக உயர்ந்தது. இதனால் பல விமான நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டையே கூட குறைத்துக் கொண்டன.. இப்போது போர் நிறுத்தம் காரணமாக எரிபொருள் விலை குறைந்துள்ளது. இதன் காரணமாக விமான நிறுவனங்கள் பயணக் கட்டணத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது.
உணவுப் பொருட்கள்
பெட்ரோல், டீசல் விலை குறையும்போது, காய்கறிகள் மற்றும் பழங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளின் வாடகை குறையும். இது சந்தையில் உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க உதவும். மேலும், உர உற்பத்தியில் வளைகுடா நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருந்தபோது உரங்களின் விலையும் உயர்ந்தது. இப்போது நிலைமை சீராவதால், விவசாயச் செலவுகள் குறைந்து, ஒட்டுமொத்த உணவுப் பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளது.
சமையல் எரிவாயு மற்றும் மின்சாரச் செலவு
இந்தியா தனது எரிசக்தித் தேவைகளுக்காகப் பெருமளவு இறக்குமதியையே நம்பியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவதால், கப்பல் போக்குவரத்துச் செலவு மற்றும் காப்பீட்டுக் கட்டணங்கள் குறையும். இது சமையல் எரிவாயு மற்றும் இயற்கை எரிவாயுவின் விலையை நிலைப்படுத்த அரசுக்கு உதவும். இதன் மூலம் சாமானிய மக்களின் வீட்டு பட்ஜெட்டில் சுமை குறையும்.
குறைந்த வட்டி விகிதம்
இது பலரும் உடனடியாகக் கவனிக்காத ஒரு முக்கியமான விஷயம். கச்சா எண்ணெய் விலை குறையும்போது, நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் குறையும். பணவீக்கம் கட்டுக்குள் இருந்தால், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வட்டி விகிதங்களை குறைக்க முன்வரும். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன என்ற போதிலும் பணவீக்கம் ஒரு முக்கிய காரணியாகும். எனவே, வட்டி விகிதங்கள் குறைந்தால், நீங்கள் வாங்கியுள்ள வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான மாதத் தவணை குறையும். புதிய தொழில் தொடங்க கடன் வாங்குபவர்களுக்கும் இது சாதகமாக அமையும்.
இந்தியாவுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 60 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. அந்தப் பாதையில் ஏற்படும் சிறு தடை கூட இந்தியாவின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யும். எனவே, அமெரிக்கா - ஈரான் இடையிலான இந்த அமைதி ஒப்பந்தம் என்பது வெறும் அரசியல் ஒப்பந்தம் மட்டுமல்ல, அது இந்திய மக்களின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கான ஒரு நற்செய்தியாகும்.
-
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.!












Click it and Unblock the Notifications