திருடு போன மொபைலை கண்டுபிடிப்பது எப்படி? மத்திய அரசு கொண்டு வந்துள்ள சூப்பர் போர்டல்!
டெல்லி: திருடு போன செல்போனை கண்டுபிடிக்க மத்திய அரசு சஞ்சார் சாத்தி என்ற புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஐஎம்இஐ எண்ணை பதிவு செய்தால் மொபைலை மீட்டுத்தரும் வசதி உள்ளது. இதில் எப்படி திருடு போன மொபைலை கண்டுபிடிப்பது என்பதை பார்க்கலாம்.
திருடு போன செல்போனை கண்டுபிடிக்க சஞ்சார் சாத்தி போர்டல் என்ற புதிய இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளம் செல்போன் பயன்படுத்துவோருக்கு பாதுகாப்பு அளிக்கவும் , செல்போன் குறித்து விழிப்புணர்வை அதிகரிக்கவும் மத்திய அரசு இந்த முயற்சியினை எடுத்துள்ளது.
நீங்கள், புதிய/பழைய மொபைல் ஃபோனை வாங்கும் போது, குடிமக்கள் தங்கள் பெயரில் வழங்கப்பட்ட ஐஎம்ஐ எண்களை அறிந்து கொள்ளவும், அவர்களுக்குத் தேவையில்லாத இணைப்புகளைத் துண்டிக்கவும், தொலைந்த மொபைல் போன்கள தேடவும் மற்றும் சாதனங்களின் உண்மையான தன்மையை சரிபார்க்கவும் இந்த சஞ்சார் சாத்தி இணைய தளம் https://sancharsaathi.gov.in/ முழு சுதந்திரம் வழங்குகிறது .

இந்த சஞ்சார் சாத்தி போர்டலில் CEIR, TAFCOP போன்ற பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன.
CEIR என்ற ஆப்ஷனில் தொலைந்த/திருடப்பட்ட மொபைல் சாதனங்களைக் கண்டறியலாம். தொலைந்த/திருடப்பட்ட மொபைல் சாதனங்களை அனைத்து தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களின் நெட்வொர்க்கில் தடுக்கவும் இந்த போர்டல் உங்களுக்கு உதவும். இந்த போர்டலில் தொலைந்த போனின் ஐஎம்ஐ எண்ணை பதிவு செய்தால், தொலைந்த/திருடப்பட்ட சாதனங்களை யாரும் இந்தியாவில் பயன்படுத்த முடியாது.
தடுக்கப்பட்ட மொபைல் போனை யாரேனும் பயன்படுத்த முயன்றால், அதன் ட்ரேஸ்பிலிட்டி உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் எங்கிருந்தாலும் மொபைலை கண்டுபிடித்து விடலாம்.
மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டதும், குடிமக்களின் இயல்பான பயன்பாட்டிற்காக சஞ்சார் சார்த்தி போர்ட்டலில் தடைநீக்கி கொள்ளலாம்.
TAFCOP ஆப்சனில் ஒரு மொபைல் சந்தாதாரர் தனது பெயரில் எத்தனை சிம் உள்ளது என்பதை சரிபார்க்கலாம். சந்தாதாரர் தேவையில்லாத அல்லது யுஸ் பண்ணாத சிம்கள் குறித்து புகாரளிக்கவும் இது உதவுகிறது.

கூடுதலாக, Keep Yourself Aware வசதி உள்ளது. இது செல்போன் பயன்பாட்டுக்கான பாதுகாப்பு, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்களைப் பற்றிய சமீபத்திய அப்டேட்களை அறியலாம். அத்துடன் செல்போன் பயன்படுத்துவது குறித்து அரசின் விழிப்புணர்வு தகவல்களை அறியலாம்.
https://sancharsaathi.gov.in/ இணைய தளம் மூலம் திருடு போன மொபைலை
எப்படி கண்டுபிடிப்பது என்பதை இப்போது நாம் பார்ப்போம். முதலில் https://sancharsaathi.gov.in/ தளத்திற்குள் செல்ல வேண்டும். அதில் CEIR என்ற ஆப்ஷனில் உள்ளே போக வேண்டும். அதில் ஐஎம்ஐ எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன் மூலம் உங்கள் தொலைந்து போன செல்போன் எங்கிருந்தாலும் பிளாக் செய்ய முடியும். அதன் பிறகு காவல்துறையில் புகார் அளித்து உங்கள் செல்போனை எளிதாக மீட்கலாம். அதன் பிறகு உங்கள் செல்போனை யாராவது பயன்படுத்த முயன்றால் , அவர்களால் பயன்படுத்த இயலாது. ஏராளமானோர் இந்த வசதியாகி போது பயன்படுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications