திருடு போன மொபைலை கண்டுபிடிப்பது எப்படி? மத்திய அரசு கொண்டு வந்துள்ள சூப்பர் போர்டல்!
டெல்லி: திருடு போன செல்போனை கண்டுபிடிக்க மத்திய அரசு சஞ்சார் சாத்தி என்ற புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஐஎம்இஐ எண்ணை பதிவு செய்தால் மொபைலை மீட்டுத்தரும் வசதி உள்ளது. இதில் எப்படி திருடு போன மொபைலை கண்டுபிடிப்பது என்பதை பார்க்கலாம்.
திருடு போன செல்போனை கண்டுபிடிக்க சஞ்சார் சாத்தி போர்டல் என்ற புதிய இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளம் செல்போன் பயன்படுத்துவோருக்கு பாதுகாப்பு அளிக்கவும் , செல்போன் குறித்து விழிப்புணர்வை அதிகரிக்கவும் மத்திய அரசு இந்த முயற்சியினை எடுத்துள்ளது.
நீங்கள், புதிய/பழைய மொபைல் ஃபோனை வாங்கும் போது, குடிமக்கள் தங்கள் பெயரில் வழங்கப்பட்ட ஐஎம்ஐ எண்களை அறிந்து கொள்ளவும், அவர்களுக்குத் தேவையில்லாத இணைப்புகளைத் துண்டிக்கவும், தொலைந்த மொபைல் போன்கள தேடவும் மற்றும் சாதனங்களின் உண்மையான தன்மையை சரிபார்க்கவும் இந்த சஞ்சார் சாத்தி இணைய தளம் https://sancharsaathi.gov.in/ முழு சுதந்திரம் வழங்குகிறது .

இந்த சஞ்சார் சாத்தி போர்டலில் CEIR, TAFCOP போன்ற பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன.
CEIR என்ற ஆப்ஷனில் தொலைந்த/திருடப்பட்ட மொபைல் சாதனங்களைக் கண்டறியலாம். தொலைந்த/திருடப்பட்ட மொபைல் சாதனங்களை அனைத்து தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களின் நெட்வொர்க்கில் தடுக்கவும் இந்த போர்டல் உங்களுக்கு உதவும். இந்த போர்டலில் தொலைந்த போனின் ஐஎம்ஐ எண்ணை பதிவு செய்தால், தொலைந்த/திருடப்பட்ட சாதனங்களை யாரும் இந்தியாவில் பயன்படுத்த முடியாது.
தடுக்கப்பட்ட மொபைல் போனை யாரேனும் பயன்படுத்த முயன்றால், அதன் ட்ரேஸ்பிலிட்டி உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் எங்கிருந்தாலும் மொபைலை கண்டுபிடித்து விடலாம்.
மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டதும், குடிமக்களின் இயல்பான பயன்பாட்டிற்காக சஞ்சார் சார்த்தி போர்ட்டலில் தடைநீக்கி கொள்ளலாம்.
TAFCOP ஆப்சனில் ஒரு மொபைல் சந்தாதாரர் தனது பெயரில் எத்தனை சிம் உள்ளது என்பதை சரிபார்க்கலாம். சந்தாதாரர் தேவையில்லாத அல்லது யுஸ் பண்ணாத சிம்கள் குறித்து புகாரளிக்கவும் இது உதவுகிறது.

கூடுதலாக, Keep Yourself Aware வசதி உள்ளது. இது செல்போன் பயன்பாட்டுக்கான பாதுகாப்பு, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்களைப் பற்றிய சமீபத்திய அப்டேட்களை அறியலாம். அத்துடன் செல்போன் பயன்படுத்துவது குறித்து அரசின் விழிப்புணர்வு தகவல்களை அறியலாம்.
https://sancharsaathi.gov.in/ இணைய தளம் மூலம் திருடு போன மொபைலை
எப்படி கண்டுபிடிப்பது என்பதை இப்போது நாம் பார்ப்போம். முதலில் https://sancharsaathi.gov.in/ தளத்திற்குள் செல்ல வேண்டும். அதில் CEIR என்ற ஆப்ஷனில் உள்ளே போக வேண்டும். அதில் ஐஎம்ஐ எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன் மூலம் உங்கள் தொலைந்து போன செல்போன் எங்கிருந்தாலும் பிளாக் செய்ய முடியும். அதன் பிறகு காவல்துறையில் புகார் அளித்து உங்கள் செல்போனை எளிதாக மீட்கலாம். அதன் பிறகு உங்கள் செல்போனை யாராவது பயன்படுத்த முயன்றால் , அவர்களால் பயன்படுத்த இயலாது. ஏராளமானோர் இந்த வசதியாகி போது பயன்படுத்தி வருகிறார்கள்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications