தம்ரா துறைமுகம் அருகே கரையை கடந்த யாஸ் புயல்.. பயங்கர பேயாக மாறிய வீடியோ!
டெல்லி: வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் ஒடிஸா அருகே கரையை கடந்தபோது மேற்கு வங்கம், ஒடிஸாவில் பேய்க் காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் இன்று மதியம் கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடந்த போது சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் மேற்கு வங்கம், ஒடிஸா பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
|
சூப்பர் புயல்
கொல்கத்தாவில் சூப்பர் புயல் யாஸ் வருவதற்கு முன்னர் இருட்டிக் கொண்டு மிரட்டும் மேகக் கூட்டங்களை பாருங்கள்.
|
மேற்கு வங்கம்
வங்காளத்து மக்களுக்காக பிரார்த்தனை செய்வோம்.
|
மரங்கள்
பத்ராக்கில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் புயலால் மரங்கள் அசைவதை பாருங்கள்.
|
யாஸ் புயல்
மேற்கு வங்கத்தில் சூப்பர் புயல் யாஸ் உருவான பிறகு வடக்கு 24 பர்கானாவில் புழுதி காற்று வீசுகிறது.
|
வேகமாக வீசும் காற்று
தம்ரா துறைமுகம் அருகே புயல் கரையை கடந்த போது வேகமாக வீசும் காற்று.
|
ஹோட்டல்
மேற்கு வங்கத்தில் மந்தர்மோனியில் உள்ள ஹோட்டல் தேவ்ராஜை சூழ்ந்த வெள்ளம்.
|
யாஸ் புயல்
மேற்கு வங்கத்தை யாஸ் புயல் கடந்த போது திகா கடற்கரை கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
|
கனமழை
மேற்கு வங்கத்தில் உள்ள டயமண்ட் துறைமுகம் கனமழையால் மூழ்கியது. அங்கிருந்து தொழிலாளர்களை மீட்கும் போலீஸார்.