என்ன நடந்தது? .. ஹைதராபாத் என்கவுண்டர் பற்றி தெலுங்கானா அரசிடம் ரிப்போர்ட் கேட்கும் உள்துறை
ஹைதராபாத்தில் நடந்த என்கவுண்டர் குறித்து விளக்கமளிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் தெலுங்கானா அரசிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
டெல்லி: ஹைதராபாத்தில் நடந்த என்கவுண்டர் குறித்து விளக்கமளிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் தெலுங்கானா அரசிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த மாதம் 27ம் தேதி ஹைதராபாத் அருகே கால்நடை மருத்துவ பெண்மணி வன்புணர்வு செய்து கொல்லப்பட்டார். இந்த கொலை நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மிக மோசமாக கொடுமைப்படுத்தப்பட்டு இவர் கொலை செய்யப்பட்டார்.
அந்த மருத்துவர் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் இன்று அதிகாலை சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேரும் இன்று என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

என்ன விளக்கம்
இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடந்த என்கவுண்டர் குறித்து விளக்கமளிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் தெலுங்கானா அரசிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 4 பேரும் கொல்லப்பட்டது. என்ன நடந்தது என்று விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பெண் வன்புணர்வு
அதேபோல் ஹைதராபாத் பெண் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது குறித்தும் விளக்கம் அளிக்கும்படி இதில் கூறப்பட்டு இருக்கிறது. அந்த பெண்ணுக்கு எதிரான வழக்கில் எவ்வளவு விசாரணை இதுவரை நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

எப்படி நடந்தது?
மேலும் இந்த வழக்கில் 4 பேரும் எப்படி குற்றவாளிகள் என்று கண்டுபிடிக்கப்பட்டனர். வாக்குமூலம் தவிர வேறு என்ன ஆதாரங்கள் இருக்கிறது. என்ன மாதிரியான மருத்துவ ஆதாரங்கள் இருக்கிறது என்றும் இதில் மத்திய உள்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியது.

என்ன சந்தேகம்
அதே சமயம் இன்னொரு பக்கம் போலீஸ் என்கவுண்டர் குறித்து நிறைய சர்ச்சைகள் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. அதிகாலை 3.30 மணிக்கு போலீசார் குற்றவாளிகளை கொண்டு சென்றது ஏன்? ஏன் கையில் விலங்கு இல்லாமல் போலீசார் அவர்களை அழைத்து சென்றனர் என்றும் கேள்வி எழுந்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications