வேளாண் மசோதா... திடீர் பல்டி அடித்த ஹர்சிம்ரத் பாதல்...விவசாயிகள் மீது பழி!!
டெல்லி: வேளாண் மசோதா விவசாயிகளுக்கு எதிரானது என்று நான் கூறவில்லை. விவசாயிகள்தான் அவ்வாறு கூறினார்கள் என்று இந்த மசோதாவை எதிர்த்து மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருக்கும் சிரோமணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் பாதல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இவர் இந்தியா டுடே சேனலுக்கு அளித்திருந்த பேட்டியில், ''மூன்று வேளாண் மசோதாக்களையும் விவசாயிகளுக்கு எதிரானது என்று நான் கூறவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். விவசாயிகள்தான் அவ்வாறு கூறி இருந்தனர்.

நம்பிக்கை
நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து இருக்கும் மூன்று வேளாண் மசோதாக்களில் எனக்கு நம்பிக்கை இருக்கிறதா என்பது முக்கியம் இல்லை. அதில் விவசாயிகளுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். அவர்களுக்கு பயன் அளிக்க வேண்டும்.

கவுரவம்
வேளாண் அவசர சட்டத்திற்கு எதிராக நான் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன். விவசாயிகள் மற்றும் அவர்களது மகளாக அவர்களுக்கு துணை நிற்பதை கவுரவமாக கருதுகிறேன். இறுதி வரை போராட வேண்டும் என்பதற்காகத் தான் துவக்கத்தில் இந்த சட்டம் கொண்டு வந்தபோது நான் ராஜினாமா செய்யவில்லை. இறுதி வரை போராடி மாற்றம் கொண்டு வரமுடியும் என்று நம்பி இருந்தேன்'' என்று தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் இறப்பு
இதுகுறித்து இவரது கணவரும் அகாலிதளம் கட்சியின் தலைவருமான சுக்பீர் சிங் பாதல் கூறுகையில், ''மூன்று வேளாண் மசோதாக்களையும் கடுமையாக எதிர்க்கிறேன். 20 லட்சம் விவசாயிகள். மூன்று லட்சம் மண்டி தொழிலாளர்கள், 30 லட்சம் பருப்பு தானிய உற்பத்தியாளர்கள் ஆகியோரை இறக்கட்டும் என்று இந்த மசோதாக்களை அறிமுகம் செய்துள்ளனர். கடந்த 50 ஆண்டுகளாக இருக்கும் கொள்முதல் முறையையும் அழிப்பதற்காக இந்த மசோதாக்களை கொண்டு வந்துள்ளனர்'' என்றார்.

கூட்டணி விரிசல்
பாஜகவுடன் நீண்ட கூட்டணி வைத்து இருக்கும் அகாலிதளம் கட்சி சார்பில் மோடி அரசில் கடந்த 2014ல் இருந்து ஒரே உறுப்பினராக ஹர்சிம்ரத் கவுர் பாதல் இருந்து வருகிறார். தற்போது இந்த மசோதாவால் பஞ்சாபில் கட்சியின் செல்வாக்கை உயர்த்திப் பிடிக்க தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications