இது லிஸ்ட்லயே இல்லை.. கைதிகளுக்கு 5 கோடி பர்த்டே கிப்ட்.. டெல்லியை அதிர வைத்த சுகேஷ் சந்திரசேகர்
டெல்லி: பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், தனது பிறந்தநாளையொட்டி சிறைக்கைதிகளுக்கு ரூ.5 கோடி நிதியுதவி அளிக்க விரும்புவதாக கூறியுள்ளார். அதற்கு அனுமதி தருமாறும் சிறைத்துறை டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
பெங்களூரைச் சேர்ந்த மோசடி நபர் சுகேஷ் சந்திரசேகர், தொழிலதிபர்கள் பலரை ஏமாற்றி பணம் பறித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததாக புகார்கள் உள்ளது. இதனால் பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கிய சுகேஷ் சந்திரசேகர் டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், டெல்லி சிறைத்துறை டி.ஜி.பி.க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் தான் தனது பிறந்தநாளையொட்டி சிறைக்கைதிகளுக்கு ரூ.5 கோடி நிதியுதவி அளிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

முயற்சி
இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ளதாவது: நீதித்துறை கைதிகளுக்கு உதவும் விவகாரத்தில் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. ஆனால் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள விசாரணைக் கைதிகளின் குடும்பங்களுக்கு உதவ முயற்சிக்கவில்லை.அன்பான உறவுகள் சிறையில் இருப்பதால் பல குடும்பங்களில் தற்கொலைகள் நடப்பதை நான் பார்த்துள்ளேன்.

பிறந்த நாள்
எனவே, உறவுகளிடம் இருந்து விலகி இருக்கும் கைதிகளுக்கு ஒரு தனி மனிதனாக ரூ.5 கோடியே 11 லட்சம் நிதி வழங்க இருக்கிறேன். இது முறையான வருவாய் மூலம் வந்த நிதி. இது எந்த குற்றப்பின்னணியில் இருந்தும் வந்தது அல்ல. அதற்கான ஆதாரங்களை நான் சமர்ப்பிக்க தயாராக உள்ளேன்.

உதவுகிறோம்
நாளை மறுநாள் (மார்ச் 25-ந் தேதி) என்னுடைய பிறந்தநாள் என்பதால் எனது பிறந்தநாள் பரிசாக இந்த சிறிய தொகையை ஏற்றுக்கொண்டால் மகிழ்ச்சி அடைவேன். தென்னிந்தியாவில் லட்சக்கணக்கான பேருக்கு உணவளிக்கும் சாரதாம்மா தொண்டு நிறுவனம் மற்றும் சந்திரசேகர் புற்றுநோய் அறக்கட்டளை மூலம் பல நலத்திட்டங்களில் நானும், என் குடும்பத்தினரும் ஈடுபட்டு வருகிறோம்.

குறைந்த பட்ச உதவி
ஏழை நோயாளிகளுக்கு மாதம்தோறும் இலவச ஹீமோதெரபியும் அளித்து வருகிறோம். ஆனால் இங்கு (டெல்லியில்) ஜாமீனுக்கு பணம் செலுத்த வசதி இல்லாத கைதிகளைப் பார்க்கும்போது எனக்கு இதயமே வலிக்கிறது. அவர்கள் நீண்டகாலமாக சிறையில் இருப்பதால் குடும்பங்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. எனவே நான் என்னால் இயன்ற இந்த குறைந்தபட்ச உதவியை விரும்புகிறேன். அதற்கு தாங்கள் அனுமதிக்க வேண்டும் ' என சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

விசாரணை கைதிகள்
இதனிடையே சுகேஷ் சந்திரசேகர் கடந்த 2017-ம் ஆண்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதிருந்து தற்போது வரை அவர் 400-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் ஜாமீன் பெற உதவி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், தனது பிறந்தநாளையொட்டி சிறைக்கைதிகளுக்கு ரூ.5 கோடி நிதியுதவி அளிக்க விரும்புவதாக எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications