Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறையில் தள்ளினாலும் பயப்பட மாட்டேன்.. ராகுல் காந்தி அதிரடி பிரஸ்மீட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜனநாயகம் பற்றி பேசும் பாஜக அரசு மக்களவையில் பேசுவதற்கு என்னை அனுமதிக்கவில்லை. கேள்வி கேட்பதை நான் நிறுத்த மாட்டேன். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படமாட்டேன். எந்த வகையிலும் நான் இந்திய அரசுக்கு எதிராக செயல்படவில்லை என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.

கடந்த 2019- ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கர்நாடகா மாநிலம் கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ராகுல் மீது அவதூறு வழக்கு

ராகுல் மீது அவதூறு வழக்கு

ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிராக குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, மோடியின் பெயர் குறித்து சர்ச்சைக்குரிய விதமாக பேசியிருந்தார். இதன்மூலம் அவர் ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமானப்படுத்தியுள்ளார் என்று தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

குற்றவாளி என்று தீர்ப்பு

குற்றவாளி என்று தீர்ப்பு

சூரத் நீதிமன்றத்தில் சுமார் 4 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தந்து. இந்த நிலையில், சூரத் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. அவதூறு வழக்கில் தீர்ப்பளித்த சூரத் மாவட்ட நீதிமன்றம், ராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.

ராகுல் காந்தி பிரஸ்மீட்

ராகுல் காந்தி பிரஸ்மீட்

மேலும் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. இந்த வழக்கில் இரண்டுஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி எம்.பி பதவி பறிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் முறையாக செய்தியாளர்களை ராகுல் காந்தி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பயப்பட மாட்டேன்

பயப்பட மாட்டேன்

ராணுவம், விமானத்துறை தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடனே வைத்து வருகிறேன். ஜனநாயகம் குறித்து பேசும் பாஜக மக்களவையில் பேச அனுமதிப்பது இல்லை. என் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை. தேசத்திற்கு எதிரான சக்திகளை முறியடிப்பேன். எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்பட மாட்டேன். மோடி - அதானி உறவு குறித்து நான் கேள்வி கேட்பதை நிறுத்த போவது இல்லை. தேசத்திற்கு எதிரான சக்திகளை போராடி முறியடிப்பேன்.

சிறையில் அடைத்தாலும்..

சிறையில் அடைத்தாலும்..

பாஜக அமைச்சர்கள் என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றனர். நாடாளுமன்றத்தில் நான் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டனர். என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மக்களிடம் நியாயம் கேட்பேன். பல போலி நிறுவனங்கள் மூலம் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. என் மீது வன்முறையை கட்டவிழ்த்தாலும்.. சிறையில் அடைத்தாலும்.. அஞ்ச மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+