சிங்கம் ரிட்டர்ன்: மீண்டும் போர் விமானத்தை இயக்கினார் அபிநந்தன்.. விமானப்படை தளபதியும் உடன் பறந்தார்
மீண்டும் களமிறங்கினார் அபிநந்தன் டெல்லி: மிக்-21 விமானத்தை மீண்டும் இயக்கி பயிற்சி பெற்று அசத்தினார் விங் கமாண்டர் அபிநந்தன். ஏர் சீப் மார்ஷல் தனோவா அபிநந்தனுடன் இணைந்து விமானத்தில் பறந்தது சிறப்பாகும்.
கடந்த பிப்ரவரி 27ம் தேதி, இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தானின் அதிநவீன எப்-16 ரக விமானத்தில், அந்த நாட்டு படையினர் இந்திய எல்லைக்குள் புகுந்தபோது, அதை தனது மிக்-21 வகை போர் விமானத்தை கொண்டு எதிர்த்து விரட்டியடித்தார் அபிநந்தன்.

ஆனால் எதிர்பாராதவிதமாக, பாகிஸ்தான் எல்லைக்குள் அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், பாரசூட்டில் குதித்து தப்பினார் அபிநந்தன். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினரால் அபிநந்தன் கைது செய்யப்பட்டார்.
சர்வதேச சமூகம் மூலமாக இந்தியா கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அடுத்த சில நாட்களில் அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை மற்றும் ஓய்வுக்கு பிறகு மீண்டும் அபிநந்தன் இன்று பணிக்கு திரும்பியுள்ளார்.
#WATCH Pathankot: IAF Chief Air Chief Marshal BS Dhanoa and Wing Commander Abhinandan Varthaman moving towards the MiG-21 before their sortie earlier today. #Punjab pic.twitter.com/Rz9KJVJVWi
— ANI (@ANI) September 2, 2019
பதன்கோட் விமான தளத்தில் இன்று மிக்-21 போர் விமானத்தை இயக்கி அவர் பயிற்சியில் ஈடுபட்டார். அவருடன், விமானப்படை தலைமை தளபதி தனோவா பயணித்து அசத்தினார்.
விமானப்படையின் தளபதியே அபிநந்தனுடன் இணைந்து பயணித்து இருப்பது, அவருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை காட்டுகிறது.
பொதுவாக எதிரி நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட, அல்லது விபத்துக்குள்ளான விமானத்தின் அதே விமானி போர் விமானத்தை மீண்டும் இயக்குவது
என்பதெல்லாம் அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. ஆனால் அபிநந்தன் மிகுந்த தைரியசாலி. பாகிஸ்தானில் அவர் சிறை பிடிக்கப்பட்டபோது இந்தியா தொடர்பான எந்தத் தகவலையும் தெரிவிக்க மறுத்து தனது நெஞ்சுரத்தை காட்டினார்.

இப்போது மருத்துவ சிகிச்சை, பயிற்சி என அனைத்தும் முடிந்து மீண்டும் மிக்-21 ரக விமானத்தில் அபிநந்தன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அபிநந்தன் மீண்டும் வருகை தந்துள்ளதை, சிங்கம் களம் இறங்கிவிட்டது என்று சிலாகிக்கிறார்கள் நெட்டிசன்கள்.
பைசன் வகை விமானத்தை கொண்டு மிக அதி நவீன போர் விமானமான பாகிஸ்தானின் f 16 ரக விமானத்தை அபிநந்தன் தாக்கி அழித்தார் என்றால் அவரது தனிப்பட்ட திறமை எத்தகையது என்பதை புரிந்து கொள்ளமுடியும்.
அத்தகைய வீரம் மற்றும் திறமைமிக்க அபிநந்தனை பணியிலிருந்து இழக்க, விமானப்படை தயாரில்லை. எனவேதான் அவருக்கு இந்த அளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications