தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக 'தமிழ்நாடு பேட்ஜ்' ஐபி சிறப்பு இயக்குநர் டிவி ரவிச்சந்திரன் நியமனம்!
டெல்லி: நாட்டின் தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக உளவுத்துறை (IB)சிறப்பு இயக்குநராக பதவி வகித்த தமிழக பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான டிவி ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். 'ரா' உளவு அமைப்பின் முன்னாள் தலைவரும் தற்போதைய தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகரான ராஜீந்தர் கன்னா, தேசியப் பாதுகாப்பு கூடுதல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் அஜித் தோவல் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர், கூடுதல் ஆலோசகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக ஐபி சிறப்பு இயக்குநரான டிவி ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். 1990-ம் ஆண்டு தமிழ்நாடு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரி டிவி ரவிச்சந்திரன். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவரான டிவி ரவிச்சந்திரனின் தந்தை, அம்மாநில அரசின் வனத்துறை செயலாளராக பணிபுரிந்தார்.
தமிழ்நாட்டின் பல நகரங்களில் காவல்துறை உயர் அதிகாரியாக பணியாற்றியவர். நாகர்கோவில் ஏஎஸ்பியாக முதன் முதலில் பணியில் இணைந்தார். பின்னர் கடலூர் எஸ்பி, தமிழக காவல்துறை கியூ பிரிவு எஸ்பி, ஊழல் தடுப்பு- கண்காணிப்புத்துறை எஸ்பியாகவும் பதவி வகித்தவர் டிவி ரவிச்சந்திரன் ஐபிஎஸ்.
2000-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் இருந்து மத்திய அரசுப் பணிக்கு சென்ற டிவி ரவிச்சந்திரன் ஐபிஎஸ், உளவுத்துறையான IB-ல் டெல்லியில் பணியாற்றினார். சென்னையில் உள்ள உளவுத்துறையின் இணை இயக்குநராகவும் பணியாற்றினார். ஜெர்மனியின் பெர்லினில் இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு அதிகாரியாகவும் பணிபுரிந்தார்.

2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து சென்னையில் உளவுத்துறை கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2023-ல் உளவுத்துறை சிறப்பு இயக்குநராக பதவி வகித்த நிலையில் தற்போது தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல ரா உளவு அமைப்பின் முன்னாள் தலைவரும் தற்போது தேசிய பாதுகாப்புதுணை ஆலோசகருமான ரஜீந்தர் கன்னா, தேசியப் பாதுகாப்பு கூடுதல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்
-
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications