Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்! ஆனாலும் கொரோனா 4வது அலைக்கு வாய்ப்பில்லை.. யுடர்ன் அடித்த ஐஐடி கான்பூர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி : நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களில் அதிகரிப்பதும் குறைவதாகவும் இருக்கும் நிலையில், ஐஐடி கான்பூர் பேராசிரியரான மனிந்திர அகர்வால் நாட்டில் நான்காவது அலை நடக்க வாய்ப்பில்லை என கூறியுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் ஆசியா மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகள் கொரோனாவின் நான்காவது அலையின் பிடியில் உள்ளன.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கொரோனா விதிகள் தளர்த்தப்பட்டவுடன், பல பள்ளிகளில் மாணவர்களிடையே கொரோனா பரவத் தொடங்கியுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா 4வது அலை

கொரோனா 4வது அலை

இந்நிலையில் கொரோனா நான்காவது அலை இந்தியாவில் ஜூன் 22 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 24 வரை தொடரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர், கொரோனா நான்காவது அலை குறைந்தது நான்கு மாதங்கள் நீடிக்கும் என்று ஐஐடி கான்பூரின் ஆராய்ச்சியாளர்கள் கணித்தனர். அவர்களின் கணிப்புகள், குறிப்பாக மூன்றாவது அலையைப் பற்றிய கணிப்புகள் துல்லியமானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஐஐடி கான்பூரின் கணிதம் மற்றும் புள்ளியியல் துறையின் சபரா பர்ஷத் ராஜேஷ்பாய், சுப்ரா சங்கர் தர் மற்றும் ஷலப் ஆகியோர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

பாதிப்பு அதிகரிப்பு

பாதிப்பு அதிகரிப்பு

அவர்கள் கணித்துள்ளது போலவே டெல்லி, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, மிசோரம் போன்ற பல மாநிலங்களில் புதிய பாதிப்புகள் அதிகரித்துள்ளன. பல நாடுகளில், கொரோனா, ஓமிக்ரான் BA.1, Omicron BA.2 மற்றும் XE வகைகளின் புதிய வகைகள் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இவைதான் கொரோனாவின் மிக வேகமாக பரவும் வகையில் தற்போது மக்களிடையே பரவி வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை தேசிய தலைநகரான டெல்லியில் 517 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் நேர்மறை விகிதம் 4.21 சதவீதமாக இருந்தது.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா வழக்குகள் அதிகரித்ததை அடுத்து, பல மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயம் என்ற ஆணையை மீண்டும் அமல்படுத்தியுள்ளது உத்தரபிரதேச அரசு. உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ஏப்ரல் 16 முதல் ஜூன் 10 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐஐடி கான்பூர் பேராசிரியரான மனிந்திர அகர்வால் நாட்டில் நான்காவது அலை நடக்க வாய்ப்பில்லை என கூறியுள்ளார். உத்தரபிரதேச அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் கோவிட் வழக்குகளைக் குறைப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி

மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி

கொரோனா வைரஸுக்கு எதிரான இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி மக்களிடையே 90 சதவீதத்திற்கு மேல் இருப்பதால், நான்காவது அலை சாத்தியமற்றது என்றும் கூறினார். வழக்குகளின் அதிகரிப்பு நீண்ட காலம் நீடிக்காது என்று கணித மாதிரி கூறுகிறது என்றும் அவர் கூறினார்." டெல்லி என்சிஆர் பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பிராந்தியத்தில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் காரணமாகும். சமீபத்தில், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன மற்றும் மக்கள் முகக்கவசம் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர், எனவே அதிக பாதிப்பு உள்ளது. ஆனால் தற்போது நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருப்பதால் இது மக்களின் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாது" என்றார்.

தடுப்பூசிகளின் செயல்திறன்

தடுப்பூசிகளின் செயல்திறன்

தற்போதைய தடுப்பூசிகள் புதிய மாறுபாட்டிற்கு எதிராக முழுமையாக செயல்படுவதாகக் கூறிய பேராசிரியர் அகர்வால் "எந்தவொரு தடுப்பூசியாலும் நோய்த்தொற்றைத் தடுக்க முடியாது, ஆனால் கடுமையான நோய் பாதிப்புகளால் மக்களின் உயிருக்கு பாதிப்புகள் எதுவும் இருக்காது. தடுப்பூசிகளின் கொரோனா மாறுபாட்டிற்கு எதிராக ஆய்வுகள் நல்ல முடிவுகளைக் காட்டியுள்ளதால் மற்ற தடுப்பூசிகள் தேவையில்லை என்றார். மத்திய சுகாதார அமைச்சகம் திங்கள்கிழமை காலை 186.54 கோடிக்கும் அதிகமான கோவிட் தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கியதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+