ஐஐடிகள் முதல் நவோதயா பள்ளிகள் வரை.. கல்வி நிறுவனங்களிடமிருந்து பல கோடி நிதி பெற்ற 'பிரதமர் கேர்ஸ்'
டெல்லி: ஐஐடிக்கள், ஐஐஎம்கள், நவோதயா பள்ளிகள், மத்திய பல்கலைக்கழகங்கள் என பலதரப்பட்ட கல்வி நிறுவனங்களிடமிருந்து, பிரதமர் நிவாரண நிதிக்கு பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. பல ஊழியர்கள் தங்கள் சம்பளப் பணத்திலிருந்து நிதி வழங்கியுள்ளனர்.
'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழ், கல்வி நிறுவனங்களிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சேகரித்த தகவல்களில் இது தெரியவந்துள்ளது.
பிரதமரின் அவசர கால நிவாரண நிதி (பி.எம். CARES) தங்களுக்கு வந்த நிதி ஆதாரம் பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தெரிவிக்க முடியாது என மறுத்திருந்தது. இந்த நிலையில்தான் கல்வி நிறுவனங்கள் வாயிலாக தரவுகள் கிடைத்துள்ளன.

பிரதமர் நிவாரண நிதி
கொரோனா பரவலையடுத்து பிரதமர் நிவாரண நிதிக்கு அனைத்து தரப்பும் நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிதியகம் உருவாக்கப்பட்ட நான்காவது நாளில், மார்ச் 31ம் தேதியன்று ரூ .3,076.62 கோடி நிதி இருந்தது. அதில் ரூ .3,075.85 கோடி "தன்னார்வ பங்களிப்புகள்" என்று பிரதமர் நிதியகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாணவர்களிடமிருந்தும் நிதி
ஆனால் "தன்னார்வ பங்களிப்புகள்" என்பதில் பல கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களின் சம்பளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து கூட நிதி பெறப்பட்டுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸின் தகவல் அறியும் கோரிக்கைகளுக்கு 82 கல்வி நிறுவனங்கள் பதிலளித்துள்ளன. அதிலுள்ள சில முக்கிய தகவல்களை பாருங்கள்.

பள்ளிகள்
நவோதே வித்யாலயா சமிதி (என்விஎஸ்) ரூ .7.48 கோடி வழங்கியுள்ளது, அதன் தலைமையகத்திலும் எட்டு மண்டல அலுவலகங்களிலும் ஊழியர்களிடமிருந்து நன்கொடை பெறப்பட்டுள்ளது. என்.வி.எஸ் கிராமப்புறங்களில் 600 க்கும் மேற்பட்ட நவோதயா பள்ளிகளை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதன் நிதியாதாரத்தை பாதுகாப்பது அவசியம்.

பல்கலைக்கழகங்கள்
11 மத்திய பல்கலைக்கழகங்கள் 3.39 கோடி ரூபாயை வழங்கியுள்ளன. அவற்றில், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் (ஏ.எம்.யூ) ரூ .1.33 கோடியுடன் முதலிடத்தையும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (பி.எச்.யூ) ரூ .1.14 கோடியுடன் 2வது இடத்தையும் பிடித்துள்ளன. டெல்லியை சேர்ந்த மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் (சி.எஸ்.யூ) ரூ .27.38 லட்சத்தை வழங்கியுள்ளது.

ஐஐடிக்கள்
20 ஐ.ஐ.டி.கள் ரூ .5.47 கோடி வழங்கியுள்ளன. ஐ.ஐ.டி-கான்பூர் ரூ .47.71 லட்சம் வழங்கியுள்ளது. இதில் ரூ .15 லட்சம் ஓய்வூதியதாரர்களிடமிருந்தும், ரூ .36,800 மாணவர்களிடமிருந்தும், மீதமுள்ளவை ஊழியர்களிடமிருந்தும் பெறப்பட்டுள்ளன. ஐ.ஐ.டி-ரூர்க்கி ரூ .59.45 லட்சத்திற்கும் மேலாக வழங்கியுள்ளது. அதில் ரூ .4,226 அலுவலகத்திலும், மீதமுள்ளவை ஊழியர்களிடமிருந்தும் பெறப்பட்டுள்ளன.

ஐஐஎம்
ஐ.ஐ.எம். பட்டியலில் கோழிக்கோடு (ரூ. 33.53 லட்சம்) முதலிடத்தில் உள்ளது. ஐ.ஐ.எம்-அகமதாபாத் ரூ 11.59 லட்சத்திற்கும் மேலாக வழங்கியுள்ளது. ஐ.ஐ.எம்-இந்தூர் (ரூ. 6.91 லட்சம்), ஐ.ஐ.எம்-கொல்கத்தா (ரூ. 4.56 லட்சம்) நிதி வழங்கியுள்ளன. ஐ.ஐ.எம்-கோழிக்கோட்டின் "கார்பஸ் நிதியிலிருந்து" ரூ .25 லட்சம் பெறப்பட்டதாம். மீதமுள்ளவை ஊழியர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

கேள்விகள்
முன்னணி அறிவியல் நிறுவனங்களில், ஐ.ஐ.எஸ்.சி-பெங்களூர் ரூ .254.64 லட்சம், ஏழு ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.கள் இணைந்து ரூ .45.79 லட்சம் நன்கொடை அளித்தன. மற்ற முக்கிய நிறுவனங்கள் பட்டியலில், என்.சி.இ.ஆர்.டி ரூ .35.22 லட்சம், ஏ.ஐ.சி.டி.இ ரூ. 13.80 லட்சம் மற்றும் யு.ஜி.சி ரூ .1.41 லட்சம் வழங்கியுள்ளன. தன்னார்வத்தோடு நிதி வழங்கியதாக கல்வி நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால் கட்டாயப்படுத்தி வசூலிக்காமல் இவ்வளவு நிதி திரட்டப்பட்டிருக்க முடியுமா?. கல்வி நிறுவனங்களிடமிருந்து இவ்வளவு நிதி பெறப்பட்டுள்ள நிலையில், வருங்காலத்தில் இவற்றின் நிதி ஆதாரம் எப்படி இருக்கும் என்ற கேள்விகளும் எழுகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications