Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பர்த் டே பார்ட்டி".. பிரச்சனைக்குரிய மாநிலம்.. நாகாலாந்து ஆளுநரானார் இல.கணேசன்.. நடந்தது என்ன?

முன்னதாக மேற்கு வங்க ஆளுநராக இல கணேசன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் தற்போது நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவரிடம் ஏற்கனவே கூடுதல் பொறுப்பாக இருந்த மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுக்க மொத்தம் 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற லெப்.ஜெனரல் கைவல்ய திரிவிக்ரம் பர்னாய்க் அருணாச்சல பிரதேச ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். லக்‌ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா- சிக்கிம் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

ஆளுநர்கள் மாற்றம்

ஆளுநர்கள் மாற்றம்

சிவ் பிரதாப் சுக்லா- இமாச்சல பிரதேசம் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். குலாம் சந்த் கட்டாரியா- அஸ்ஸாம் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் நசீர்- ஆந்திரா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஆந்திரா ஆளுநர் பிஸ்வா பூஷண் ஹரிசந்திரன் - சத்தீஸ்கர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சத்தீஸ்கர் ஆளுநர் சுஸ்ஶ்ரீ அனுசுயா- மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

என்ன நடந்தது ?

என்ன நடந்தது ?

மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் - நாகாலாந்து ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். பீகார் ஆளுநர் பாகு சவுகான் - மேகாலயா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இமாச்சல பிரதேச ஆளுநர்- ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்- பீகார் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பயாஸ்- மகாராஷ்டிரா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அருணாச்சல பிரதேச ஆளுநர் பிரிகேடியர் பிடி மிஸ்ரா- லடாக் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

நியமனம்

நியமனம்

மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் தற்போது நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவரிடம் ஏற்கனவே கூடுதல் பொறுப்பாக இருந்த மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மேற்கு வங்க ஆளுநராக இல கணேசன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். தனது அண்ணன் கோபாலனின் 80வது பிறந்தநாளை சமீபத்தில் அவர் கொண்டாடினார். அதற்கு . மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வந்திருந்தார். இந்த நிகழ்வில் மம்தாவுடன் இல கணேசன் நட்பாக இருந்தார். அதேபோல் ஆளுநர் பதவியிலும் இவர் மம்தாவுடன் நட்பாக இருந்தார். இதனால் டெல்லி தரப்பு இவர் மீது கோபம் அடைந்ததாக கூறப்பட்டது.

அதிருப்தி

அதிருப்தி

அவரின் செயலில் அதிருப்தி அடைந்த டெல்லி அவரின் கூடுதல் பொறுப்பாக மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பை நீக்கியதாக கூறப்பட்டது. இதையடுத்து ஆனந்த் போஸ் என்பவர் மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன்பின் மணிப்பூர் ஆளுநராக மட்டும் இல.கணேசன் தொடர்ந்து வந்தார். தற்போது நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு இடையில் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், ஆளுநர் பதவி இவருக்கு வழங்கப்படாது என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது போராளி குழுக்கள் அதிகம் உள்ள, பாதுகாப்பு பிரச்சனைகள் நிரம்பிய நாகாலாந்திற்கு ஆளுநராக இல கணேசன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+