சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரம்: நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
டெல்லி: சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 30 ஆம் தேதி ஆஜராக பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நடிகர்கள் ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட செயலிகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சூதாட்ட செயலிகளை சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் யூடியூப் பிரபலங்கள் உள்ளிட்டோர் ஆதரித்து பிரபலப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தெலுங்கானா மாநிலம் மியாபூர் நகரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் கொடுத்த புகாரில், ஆன்லைன் சூதாட்ட செயலிகளை பிரபலப்படுத்துவதன் மூலம் அதிக அளவில் கமிஷன் தொகைகளை சில நடிகர், நடிகைகள் பெறுவதாக போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மியாபூர்நகர் போலீசார் விசாரணை நடத்தி நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நடிகைகள் லட்சுமி மஞ்சு, நிதி அகர்வால் உள்பட 29 பிரபலங்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் பஞ்சகுட்டா, சைபராபாத், சூர்யாபேட்டை மற்றும் விசாகப்பட்டினம் போலீஸ் நிலையங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பொது சூதாட்டச் சட்டம், 1867 ஐ மீறி சட்டவிரோத பந்தய செயலிகளை ஊக்குவித்ததாகக் கூறி, நடிகர்கள், தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், சமூக ஊடக பிரபலங்கள் மற்றும் யூடியூபர்கள் உள்பட 29 பேர் மீது அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையை அமலாக்க இயக்குனரகம் பதிவு செய்துள்ளது.
பஞ்சகுட்டா, மியாப்பூர், சைபராபாத், சூர்யாபேட்டை மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்ட 5 தனித்தனி வழக்குகளை தொடர்ந்து, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். அடுத்தக்கட்ட நடவடிக்கையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள 29 பேரின் வங்கி கணக்குகள் மற்றும் பணப்பரிவர்த்தனை விவரங்களை ஆய்வு செய்யவும், அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும் அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில்தான் சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 30 ஆம் தேதி ஆஜராக பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நடிகர்கள் ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் சார்பில் இது குறித்து விளக்கம் அளிக்கபட்டு இருந்தது. அதில், ‛‛கடந்த 2016ம் ஆண்டில் ஜங்லீ ரம்மியை விளப்படுத்தினேன். ஆனால் ஒரு ஆண்டுக்குள் எனது ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இது தொழில்நுட்ப ரீதியான சட்டத்துக்கு உட்பட்டது என்றாலும் நெறிமுறைகளில் பிரச்சனை இருந்தது. அதன்பிறகு எந்த சூதாட்ட செயலியையும் விளம்பரப்படுத்தவில்லை'' என்று கூறப்பட்டு இருந்தது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications