அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை.. உயிரிழப்பு அதிகரிக்கும் முன்.. உடனடி நடவடிக்கை தேவை.. டெல்லி ஐகோர்ட்
டெல்லி: கருப்பு பூஞ்சை நோயைக் காரணமாக உயிரிழப்புகள் அதிகரிக்கும் முன், அதற்குத் தேவையான மருந்துகளை இறக்குமதி செய்யுமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது தலை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பல உருமாறிய வைரஸ்கள் வகைகளும் நாடு முழுவதும் பரவி வருகிறது. இதுதவிர கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் மத்தியில் கருப்பு பூஞ்சை நோயையும் வேகமாகப் பரவுவது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோயைக் குணப்படுத்தும் Amphotericin-B என்ற மருந்தை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இறக்குமதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
ராகேஷ் மல்ஹோத்ரா என்ற வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விபின் சங்கி, ஜஸ்மீட் சிங் ஆகியோரை கொண்ட அமர்வு, "ஒட்டுமொத்தமாக நாட்டில் Amphotericin-B என்ற மருந்து இன்றைய தேவையைக் காட்டிலும் மிகக் குறைவாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. அதனை இரட்டிப்பாக உற்பத்தி செய்தாலும் தேவையைப் பூர்த்தி செய்ய முடியுமா என்ற அச்சம் உள்ளது.
மனித உயிரும், நேரமும் இங்கு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. எனவே உயிரிழப்பு அதிகரிக்கும் முன்னர் மருந்துகளை இறக்குமதி செய்ய வேண்டும். உடனடியாக இதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்க வேண்டும்" என தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications