சொந்த ரெக்கார்டை முறியடித்த பிரதமர் மோடி.. சுதந்திர தின உரையில் எவ்வளவு நேரம் பேசினார் தெரியுமா?
டெல்லி: நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதுவரை சுதந்திர தின உரையாற்றிய பிரதமர்களில் மோடி தான் அதிக நேரம் உரையாற்றினார் என்ற ரெக்கார்டு இருந்தது. இன்று அந்த ரெக்கார்டை பிரதமர் மோடி முறியடித்துள்ளார். மோடி தனது 11வது சுதந்திர தின உரையில் 1.30 மணி நேரம் பேசினார்.
சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றி விட்டு, நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில், பிரதமராக மோடி பதவியேற்றது முதல் அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் உரையாற்றி வருகிறார். கடந்த இரு தேர்தல்களிலும் வெற்றி பெற்ற பிரதமர் மோடி, 3-வது முறையாக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளார்.

98 நிமிடங்கள் பேசிய மோடி: பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு வந்த முதல் சுதந்திரதினமான இன்று 11-வது முறையாக செங்கோட்டையில் உரையாற்றினார். பிரதமர் மோடி கடந்த 2016-ஆம் ஆண்டு 96 நிமிடங்கள் சுதந்திர தினை உரை நிகழ்த்தினார். இதுவே இந்திய பிரதமர் ஒருவர் செங்கோட்டையில் நீண்ட நேரம் ஆற்றிய உரையாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி, 98 நிமிடங்கள் பேசியுள்ளார்.
குறைந்த நேர உரை: அந்த வகையில் தனது சொந்த ரெக்கார்டை பிரதமர் மோடி முறியடித்து இருக்கிறார். பிரதமர் மோடிக்கு முன்பாக, 1954 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு 72 நிமிடங்கள் பேசியிருந்ததே பிரதமரின் நீண்ட நேர உரையாக இருந்தது. குறைந்த நிமிட பேச்சு என எடுத்துக்கொண்டால் 1966 ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் உரையே ஆகும். இந்திரா காந்தி அந்த ஆண்டு தனது சுதந்திர தின உரையை வெறும் 14 நிமிடங்களில் மட்டுமே பேசினார்.
சராசரியாக 82 நிமிடங்கள்: பிரதமர் மோடியின் குறைந்த நேர சுதந்திர தின உரை என்பது 2017ல் பேசியதே ஆகும். அவர் அப்போது 56 நிமிடங்கள் மட்டுமே பேசினார். பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின் சராசரி நேரம் என்பது 82 நிமிடமாக உள்ளது. இந்தியாவின் வேறு எந்த பிரதமரை விடவும் இது அதிகம். பிரதமர் மோடி இன்று தனது சுதந்திர தின உரையில் பெண்கள் பாதுகாப்பு தொடங்கி இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கு வரை பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.
வெள்ளை நிற குர்தா: ஒரேநாடு ஒரே தேர்தல் நடத்த வேண்டியதன் அவசியம், மதசார்பற்ற சிவில் சட்டம் கொண்டு வருவது காலத்தின் அவசியம் என பல்வேறு முக்கிய அம்சங்கள் மோடியின் இன்றைய உரையில் இடம் பெற்று இருந்தது. பிரதமர் மோடியின் உரை மட்டும் இன்றி அவர் அணிந்து வரும் தலைப்பாகையும் சுதந்திர தினத்தன்று கவனம் பெறும்.
இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று ராஜஸ்தானி லெஹேரியா அச்சு தலைப்பாகை அணிந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். வெள்ளை நிற குர்தா மற்றும் புளு நிறத்திலான சட்டை அணிந்து வந்திருந்தார் மோடி. கடந்த ஆண்டு காவி நிறத்திலான தலைப்பாகையை சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அணிந்திருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications