உள்கட்டமைப்பு வசதிக்காக ரூ. 100 லட்சம் கோடி ஒதுக்கீடு.. சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு!
நாட்டின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூபாய் 100 லட்சம் கோடி செலவு செய்யப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி: நாட்டின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூபாய் 100 லட்சம் கோடி செலவு செய்யப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுக்க இன்று சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றினார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து இன்றோடு 73 வருடங்கள் ஆகிவிட்டது. இதையடுத்து செங்கோட்டையில் முப்படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் இன்று அணிவகுப்பு நடக்க உள்ளது.

உரை
இந்த நிலையில் பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், கட்டமைப்பு பணிகளுக்காக ரூபாய் 100 லட்சம் கோடி செலவு செய்யப்படும். இதன் மூலம் இந்தியாவின் தோற்றமே மாறும். ரயில்வே, விமானத்துறை, சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் மொத்தமாக புதுப்பிக்கப்படும் நாம் வேகமாக முன்னேற வேண்டும்.

மோடி பேச்சு
இதற்காக மூன்று டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறோம். இந்த இலக்கை நாம் கண்டிப்பாக அடைய முடியும். கடந்த 70 வருடங்களில் நாம் 2 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறியுள்ளோம். அதனால் நாம் அடுத்து ஐந்து வருடத்தில் மூன்று டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற முடியும்.

வேலை வாய்ப்பு
அதன் பின் அதை நாம் 5 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும். அதேபோல் எதிர்காலத்தில் நாம் வேலைவாய்ப்பை பெருக்குவதில் இந்த அரசு முனைப்பு காட்டி வருகிறது. கூலித் தொழிலாளர்களும் இந்த நாட்டின் சொத்துக்கள். கூலித் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்க வழிவகை செய்தது அரசு

ரயில் நிலையம்
சாலை, ரயில் நிலையங்களை அரசு நவீனப்படுத்தி வருகிறது, சாமானிய மக்களின் ஆதரவு மற்றும் வரவேற்பு கிடைத்துள்ளது. கடற்கரையை தாண்டி கடல்நடுவே துறைமுகங்களை கட்டமைக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது; சர்வதேச நாடுகளின் தரத்திற்கு இணையாக இந்தியாவை மேம்படுத்த வேண்டும், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications