"அஸ்திரத்தில்” கைவைக்கும் ‘இந்தியா’.. வாக்குப்பதிவு இயந்திரம்! மும்பை கூட்டத்தில் முக்கிய முடிவு
டெல்லி: மும்பையில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சை பற்றி ஆலோசிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்து உள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் இருந்தே அது குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு மத்திய பாஜக ஆட்சி அமைத்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிரான பலர் குரல் உயர்த்தினர். குறிப்பாக ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதை கடுமையாக எதிர்த்தனர்.

பல இடங்களில் காங்கிரஸுக்கு வாக்களித்தால் பாஜகவுக்கு விழுவதாக புகார்கள் எழுந்தன. ஆம் ஆத்மி கட்சி வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என வீடியோக்களையும் வெளியிட்டது. இதனை திட்டவட்டமாக மறுத்த தேர்தல் ஆணையம், அதை சரிகட்ட ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறையை அறிமுகம் செய்தது.
இருப்பினும் அதன் மீது பலருக்கு முழு நம்பிக்கை வரவில்லை. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பிரச்சனையை கையில் எடுத்து உள்ளது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, என்சிபி, ஆர்ஜேடி, ஜேடியு, மாநாட்டு கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்கின.
இதன் முதல் கூட்டம் ஜூன் மாதம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. 2 வது கூட்டம் பெங்களூரில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. அதில்தான் இந்தியா என்ற பெயரை கூட்டணிக்கு வைத்தார்கள். இந்த கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.
அதற்காக பல்வேறு வியூகங்களை மேற்கொண்டு வரும் இந்த கூட்டணி தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பிரச்சனையை கையில் எடுத்து இருக்கிறது. மும்பையில் வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதி 2 நாட்கள் நடைபெற உள்ள இந்தியா கூட்டணியின் 3வது அமர்வில் இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.
குறிப்பாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு மாற்றாக வாக்குச் சீட்டு முறையை மீண்டும் தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும் என இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு எதிர்க்கட்சிகள் அறிவிப்பு வெளியிடவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு உட்பட பல்வேறு குழுக்களும் அமைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications