கொரோனா தொற்று பாதிப்பில், சீனாவை முந்தியது இந்தியா.. 85000த்தை கடந்தது
டெல்லி: சீனாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 84 ஆயிரமாக உள்ள நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிகை 85000த்தை தாண்டி உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட சீனாவைவிட இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து உள்ளது. மார்ச் 25ம் தேதி இந்தியாவில் 1000த்துக்கும் கீழ் என்ற அளவில் இருந்தது. அன்று முதல் தொடர்ந்து லாக்டவுன் இந்தியாவில் இருந்து வருகிறது. இதுவரை மூன்று முறை லாக்டவுன் நீடிக்கப்பட்ட நிலையிலும் கொரோனா பாதிப்பு வெறும் இரண்டு மாதத்தில் 85 ஆயிரமாக இந்தியாவில் உயர்ந்துள்ளது.

ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின் படி. சீனாவில் 84031 பேருக்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4633 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்தியாவில் ஒரு நாளில் மட்டும் 3549 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. இதன் மூலம் இங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 85546 ஆக உயர்ந்துள்து. இதுவரை இந்தியாவில் 2649 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 51500 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சுமார் 30000 ஆயிரம் பேர் மருத்துவனைகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.
உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 14லட்சத்து 68 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 87430 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைக்கு உலகிலேயே மிக அதிகமான பாதிப்பு என்பது ரஷ்யாவில் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் இன்று மட்டும் 10598 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. ஒட்டுமொத்தமாக ரஷ்யாவில் 236 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழப்பு என்பது மிகமிக குறைவு ஆகும். இதுவரை 2418 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications