இந்தியா கூட்டணி 272-க்கும் அதிகமான இடங்களில் வெல்லும்- யார் பிரதமர் தெரியுமா? ஜெய்ராம் ரமேஷ் புதிர்!
டெல்லி: லோக்சபா தேர்தலில் "இந்தியா" கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 272-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: லோக்சபா தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவை என்பது 272-க்கும் அதிகமான இடங்கள். ஆகையால்தான் பெரும்பான்மைக்கு அதிகமான இடங்கள் அதாவது 273 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம் என்கிறோம்.

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளும் இணைந்து கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவாகும். ஜேடியூ தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் பல்டி அடிப்பதில் மாஸ்டராக திகழ்பவர். 2019-ம் ஆண்டு காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தவர் தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு. பாஜக கூட்டணியில் இருந்து விலகும் கட்சிகளை இந்திஆ கூட்டணியில் இணைப்பது தொடர்பாக கார்கே, சோனியா, ராகுல் காந்தி முடிவெடுப்பர். பாஜக கூட்டணியில் உள்ள நேர்மையான, மனிதாபிமான கட்சிகள் இந்தியா கூட்டணிக்கு வரலாம். கதவுகள் திறந்தே இருக்கின்றன. இந்தியா கூட்டணி ஆட்சியில் எந்தவித பழிவாங்கலும் இருக்காது என்பதை உறுதியாக சொல்வோம்.
பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரியில் தியானம் செய்கிறார். இதே கன்னியாகுமரியில்தான் ராகுல் காந்தி தமது பாரத் ஜோடோ யாத்திரையையும் தொடங்கினார். லோக்சபா தேர்தல் முடிவுக்குப் பின்னர் மோடி, நீண்டகாலம் தியானம்தான் செய்யப் போகிறார்.
இந்தியா கூட்டணியின் பிரதமர் யார் என்பதை 2 நாட்களில் அதாவது 48 மணிநேரத்தில் முடிவு செய்வோம். சோனியா காந்தி பிரதமராக மறுத்த போது 3 நாட்களிலேயே மன்மோகன்சிங் பிரதமர் என முடிவெடுத்திருக்கிறோம். அதனால் யார் பிரதமர் என்ற கேள்விக்கு இப்போது பதில் சொல்ல முடியாது. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
லோக்சபா தேர்தலில் பாஜக 400-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என்பது பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களின் நம்பிக்கை. ஆனால் 400 இடங்கள் என்பது இலக்குதான்.. என்கிற சமாளிப்பு பேச்சுகளும் பாஜக தலைவர்களிடம் இருக்கிறது. அதேநேரத்தில் இந்தியா கூட்டணி 270-290 இடங்களைக் கைப்பற்றும் வாய்ப்புள்ளது என சில மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். "இந்தியா" கூட்டணி தலைவர்களும் புதிய ஆட்சி அமையப் போகிறது என இடைவிடாமல் பேசி வருகின்றனர்.
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications