ரஷ்யாவிடமிருந்து 39 அதிநவீன போர் விமானங்களை வாங்கும் இந்தியா.. உறுதிப்படுத்திய ஹெச்.ஏ.எல்
டெல்லி: ரஷ்ய நாட்டிடமிருந்து மேலும் 18 சுகோய் ரக போர் விமானங்களை வாங்க, இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது பழைய மிக் -21 மற்றும் மிக் -27 விமானங்களுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால், இந்திய விமானப்படை குறைந்த அளவிலான போர் விமானங்களையே கையிருப்பில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை சமாளிக்கவே, 39 புதிய போர் விமானங்களை விரைவில் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

சூகோய் சூ-30 எம்.கே.ஐ போர் விமானங்களை இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் மற்றும் ரஷ்ய நாட்டின் சுகோய் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த வகை போர் விமானங்கள் இந்தியாவிலேயே தயரிக்கப்பட்டு வருகின்றன. பிரான்ஸ் நாட்டின் மிராஜ் போர் விமானங்களுக்கு பதிலாக, ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு சுகோய் போர் விமானங்கள் வாங்கப்பட்டன.
பிரம்மோஸ் ஏவுகணைகளை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்ட சுகோய் போர் விமானங்கள். ஒரே நேரத்தில் எதிரிகளின் இருவேறு இலக்குகளை தாக்கியழிக்கும் திறன் பெற்றவை. அதே போல அமெரிக்க விமானப்படையின் எஃப்16 போர் விமானத்திற்கு நிகரானது, பன்முக தாக்குதல் திறன் பெற்ற ரஷ்யாவின் மிக்கோயன் மிக்-29 போர் விமானங்கள்.
சுகோய் மற்றும் மிக் வகை விமானங்களும் இந்திய விமானப்படையில் ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றை மேலும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ரஷ்யாவிடமிருந்து மேலும் 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக்-29 ரக போர் விமானங்களையும் இந்திய விமானப்படை வாங்க உள்ளது.
இது குறித்து தகவல் தெரிவித்த ரஷ்ய ராணுவம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு துணை இயக்குநர் டிரோச்சோவ், அதிநவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் போர் விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தம், 450 டி-90 ரக பீரங்கிகளை நவீனப்படுத்தும் ஒப்பந்தம் ஆகியவை இந்தியாவிடமிருந்து கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு சுகோய் ரக போர் விமானங்களை தயாரித்து அளிப்பதில் அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்றி வருகிறோம் என கூறியுள்ளார். இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் தலைவர் மாதவன், கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருவில் நடைபெற்ற விமான கண்காட்சியின் போது இது குறித்து பேசி முடிவெடுக்கப்பட்டது என்றார்.
எனினும் ரஷ்யாவிடமிருந்து கொள்முதல் செய்யப்பட உள்ள 39 அதிநவீன போர் விமானங்களின் ஒப்பந்த மதிப்பு வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சூ-30 எம்.கே.ஐ போர் விமானங்களை வடிவமைப்பதற்கு தேவையான அனைத்து முக்கிய கூறுகளையும், ஆயுதங்களையும் ரஷ்யா இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. இதில் AL-31FP இயந்திரம், வைம்பெல் என்பிஓ ஆர்-77, நடுத்தர தூர ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுதங்களும் அடங்கும்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"மோடியை மிரட்டுவது ஆபத்து.." புதின் சொன்ன வார்த்தை.. அப்படியே டிரம்ப் மீதும் பாய்ச்சல் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications