பாருங்க.. இதற்கு பெயர்தான் டிஜிட்டல் ஸ்ட்ரைக்.. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அதிரடி பேச்சு
டெல்லி: 59 சீன செயலிகளுக்கான தடை சீனா மீது இந்தியா மேற்கொண்ட "டிஜிட்டல் ஸ்ட்ரைக்" என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வர்ணித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடந்த வெர்சுவல் பாஜக பேரணியில் பேசிய ரவிசங்கர் பிரசாத், இந்தியர்களின் டேட்டாக்களை பாதுகாக்க செல்போன் ஆப்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

ரவிசங்கர் பிரசாத் மேலும் கூறுகையில், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்காக, நாட்டு மக்களின் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்காக நாங்கள் டிக்டாக் உட்பட 59 ஆப்களை தடை செய்துள்ளோம். நமது எல்லைகளை ஆக்கிரமிக்க நினைப்பவர்களை எப்படி தடுப்பது என்பது பற்றியும், நாட்டு மக்களைப் பாதுகாப்பது பற்றியும் இந்தியாவுக்குத் தெரியும்.
இந்தியா அமைதியை விரும்பும் நாடு. ஆனால் யாராவது கெட்ட நோக்கத்தோடு பார்த்தாலே போதும் பொருத்தமான பதிலைக் கொடுப்போம்.
தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்கனவே வெளியிட்ட ஒரு அறிக்கையில், பல்வேறு இடங்களிடமிருந்தும் 59 ஆப்கள் மீது பல புகார்கள் வந்தன. அண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில் இவை தீங்கு விளைவிக்கின்றன. பயனர்களின் தரவை அங்கீகரிக்கப்படாத முறையில் திருடி மற்றும் மறைமுகமாக இந்தியாவுக்கு வெளியே, தங்கள் சேவையகங்களுக்கு அனுப்புகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானுக்குள் உள்ள பாலகோட் பகுதிக்குள், கடந்த வருடம், லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, பிப்ரவரி மாதம், இந்தியா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியது. இந்த நிலையில், சீன செயலிகள் மீதான தடையை டிஜிட்டல் ஸ்ட்ரைக் என வர்ணித்துள்ளார் ரவிசங்கர் பிரசாத்.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications