இந்தியா சீனா மிகப்பெரிய முடிவு.. கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்வோருக்கு சூப்பர் குட்நியூஸ்
டெல்லி: கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு நேரடியான விமான சேவையை மீண்டும் அனுமதிப்பது என இந்தியாவும் சீனாவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது சிவனை கைலாய மலையில் தரிசிக்க விரும்பும் பக்தர்கள் மிகப்பெரிய நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது. வாழ்வில் ஒருமுறையாவது கைலாயம் போக வேண்டும் என்று விரும்பும் பக்தர்கள், எளிதாக விமானத்தில் சென்று சிவபெருமானை இனி தரிசிக்க முடியும்.
சிவபெருமானை தினமும் வணங்கும் பல லட்சம் பக்தர்கள் வாழ்நாள் விருப்பம் என்றால், கைலாய மலை என்று போற்றப்படும், ஈசன் வாழ்வாதாக நம்பப்படும் இமயலைக்கு கைலாயத்திற்கு யாத்திரை சென்று வந்திட வேண்டும் என்ற ஆசை இருக்கும். 'ஈசன் அருள் இருந்தால் மட்டுமே அங்கு போக முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். அங்கு நடைபயண யாத்திரை என்பதுமிகவும் சவாலானது ஆகும். பனி லிங்கமாக காட்சியாளிக்கும் சிவனை தரிசிக்க கடும் விரதம் இருந்து பக்தர்கள் பயணிப்பார்கள்.

இந்நிலையில் விமானத்தில் சென்றும் பக்தர்கள் சிவபெருமானை தரிசிக்க முடியும். இதுவரை விமானத்தில் செல்ல இருந்த தடை விலக்கப்படுகிறது. கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு ரேடியான விமான சேவையை மீண்டும் அனுமதிப்பது என இந்தியாவும் சீனாவுக்கும் இடையேயான வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மத்தியிலான பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் கோடைகாலத்தில் கைலாஷ்-மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஒப்பந்தங்களின்படி விமானப்பயணத்திற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி சீனா சென்றுள்ளார். இன்று இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வெளியுறவுச் செயலாளர்-துணை வெளியுறவுச் செயலாளர் இடையே சந்திப்பு பெய்ஜிங்கில் நடந்தது. அப்போது தான் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு ரேடியான விமான சேவையை மீண்டும் அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் கசானில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே சந்திப்பு நடந்திருந்தது. அந்த பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்டபடி, இரு தரப்பினரும் இந்தியா-சீனா இருதரப்பு உறவுகளின் நிலையை மதிப்பாய்வு செய்து, உறவுகளை மேம்படுத்தவும், சில மக்கள் சார்ந்த சுமூக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒப்புக்கொண்டிருந்தனர். அதன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
கைலாஷ் மானசரோவருக்கு நேபாளத்தின் கஞ்சில் இருந்து போக முடியும். இந்தியாவின் லக்னோவிலிருந்து வடகிழக்கே 200 கிமீ தொலைவில் உள்ள நேபாள நாட்டின் கஞ்சில் இருந்து போக முடியும். 1951 ஆம் ஆண்டிலிருந்து சீன அரசு கையிலா மலை மற்றும் மானசரோவர் ஏரிக்கு யாத்திரை செல்ல அனுமதி அளித்து வருகிறது.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications